தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் கூட்டமைப்புக்கு ஆதரவு
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பீர்
தமிழீழ மக்களின் இன்றய காலத்தின் கட்டாயம். என்றுமே நாம் கண்டிராத வரலாற்றுப் பின்னடைவின் பின் நம்மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு தேர்தல்.தேசீயத் தலைமையை அழித்துவிட்ட அகங்காரத்தில் இன்னொரு உறுதியான தலைமை உருவாக விடவே மாட்டேனென்று மகிந்த கங்கணம் கட்டி நிற்கும் வேளையில்....
தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யலாம்?.நமக்குள்ளே உள்ள பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்வோம்.அதைப் பாவித்து அவன் நம் தலையில் மிளகாய் அரைக்கவா?. இல்லவே இல்லை. எம்பிரச்சனைகளை ஒருபக்கம் ஒதுக்குவோம்.ஓரணியில் திரள்வோம்.இலங்கை அரசுக்கும் உலகத்திற்கும் ஒரு செய்தியைச் சொல்வோம்.ஈழத்தமிழனை இனியும் பிரிக்கவோ ஏற்மாற்றவோ முடியவே முடியாது.எங்கள் தமிழர் ஒன்றானது கண்டு எங்கள் எதிரிகள் எங்கோ மறைவார்.இது உறுதியிலும் உறுதி.தமிழர் தாயகம் வடக்கையும் கிழக்கையும் முழுமையாய் ஒருங்கிணைத்து கொள்கையில் உறுதியோடு அரசியல் சாணக்கியத்தோடு அடுத்த கட்டத்திற்கு தமிழரை நகர்த்தவல்ல அணியான தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பைபிறகு தமிழீழ மக்களை வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் .ஐரோப்பா -கனடா
திங்கள், 5 ஏப்ரல், 2010
கண்ணீர் அஞ்சலி ஏப்ரல் 03 , 2009 நள்ளிரவு முதல் ஏப்ரல் 04 வரை 24 மணிநேரத்துக்குள் புதுக்குடியிருப்பு பகுதியில் பொறிக்குள் அநியாயமாக வரவளைக்கபட்டு, வீசப்பட்ட 10000 க்கும் அதிகமான செல்களாலும் 100 க்கும் அதிகமான விமான குண்டுகளாலும் (வீர) மரணம் அடைந்த
தமிழ் இளைஞர் யுவதிகளின் ஒருவருட நினைவுநாளன்று அவர்க்கு எமது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். இவர்களின் குடும்ப உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.
ஏப்ரல் 04 தமிழரின் கரிநாள்.
மே 18 தமிழரின் விடுதலை நாள்.
தீபன் (வடமுனை கட்டளைத்தளபதி), பால்ராஜின் பின் பதில் தளபதிபோலானவர்)விதுஷா (மாலதி பெண்கள் படையணி தளபதி)கமலினி ((மாலதி பெண்கள் படையணி விசேட தளபதி)துர்க்கா (சோதியா பெண்கள் படையணி தளபதி)மொகனா (சோதியா பெண்கள் படையணி விசேட தளபதி)கீர்த்தீ (ஜெயந்தன் படையணி விசேட தளபதி,புலனாய்வு )நாகேஷ் (ஜெயந்தன் படையணி தளபதி)கடாஃபி (இம்ரான் பாண்டியன், விமான எதிர்ப்பு பீரங்கி தளபதி )
அனிதாப் (சார்லஸ் அந்தனி பீரங்கி படையணி விசேட தளபதி)கொபித் (சார்லஸ் அந்தனி நிலப் படையணி விசேட தளபதி)பல்லவன் (மோட்டார் தளபதி)சிலம்பரசன்(சீலம்பு) (ராதா படையணி விசேட தளபதி)அன்பு (ராதா படையணி உதவி தளபதி)அஸ்மி (பொன்னம்மான் மிதிவெடி தளபதிமனிவண்ணன் (கிட்டு ஆட்டிலறி படையணி விசேட தளபதி)கோபால் (குட்டிஸ்ரீ மோட்டார் படையணி தளபதி)தங்கன்.எஸ் (தமிழ்ச்செல்வன் முன்னாள் உதவியாளர்)
சேரலாதன் (நிதர்சனம் டிவி பொறுப்பாளர்)
இனியவன் (ராதா படையணி )ரூபன் (புலனாய்வு)
மாங்குயில்நகுலேஷ்ஆதித்யன்சித்ராஙகன்தமிலேந்திஅமுதாபஞ்சன்
நேரு
அன்டன்
மற்றும் 1000 க்கும் மேற்பட்டோர், அடையாளம் காணப்படாது தாட்கப்பட்டோர், எரிக்கப்பட்டோர். .
ஓஓஒஒ மரணித்த வீரனே
உன் பாதணிகளை எனக்கு தா
தமிழ் இளைஞர் யுவதிகளின் ஒருவருட நினைவுநாளன்று அவர்க்கு எமது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். இவர்களின் குடும்ப உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.
ஏப்ரல் 04 தமிழரின் கரிநாள்.
மே 18 தமிழரின் விடுதலை நாள்.
தீபன் (வடமுனை கட்டளைத்தளபதி), பால்ராஜின் பின் பதில் தளபதிபோலானவர்)விதுஷா (மாலதி பெண்கள் படையணி தளபதி)கமலினி ((மாலதி பெண்கள் படையணி விசேட தளபதி)துர்க்கா (சோதியா பெண்கள் படையணி தளபதி)மொகனா (சோதியா பெண்கள் படையணி விசேட தளபதி)கீர்த்தீ (ஜெயந்தன் படையணி விசேட தளபதி,புலனாய்வு )நாகேஷ் (ஜெயந்தன் படையணி தளபதி)கடாஃபி (இம்ரான் பாண்டியன், விமான எதிர்ப்பு பீரங்கி தளபதி )
அனிதாப் (சார்லஸ் அந்தனி பீரங்கி படையணி விசேட தளபதி)கொபித் (சார்லஸ் அந்தனி நிலப் படையணி விசேட தளபதி)பல்லவன் (மோட்டார் தளபதி)சிலம்பரசன்(சீலம்பு) (ராதா படையணி விசேட தளபதி)அன்பு (ராதா படையணி உதவி தளபதி)அஸ்மி (பொன்னம்மான் மிதிவெடி தளபதிமனிவண்ணன் (கிட்டு ஆட்டிலறி படையணி விசேட தளபதி)கோபால் (குட்டிஸ்ரீ மோட்டார் படையணி தளபதி)தங்கன்.எஸ் (தமிழ்ச்செல்வன் முன்னாள் உதவியாளர்)
சேரலாதன் (நிதர்சனம் டிவி பொறுப்பாளர்)
இனியவன் (ராதா படையணி )ரூபன் (புலனாய்வு)
மாங்குயில்நகுலேஷ்ஆதித்யன்சித்ராஙகன்தமிலேந்திஅமுதாபஞ்சன்
நேரு
அன்டன்
மற்றும் 1000 க்கும் மேற்பட்டோர், அடையாளம் காணப்படாது தாட்கப்பட்டோர், எரிக்கப்பட்டோர். .
ஓஓஒஒ மரணித்த வீரனே
உன் பாதணிகளை எனக்கு தா
புதன், 10 மார்ச், 2010
Trincomalee District
General Election 2004
ILLANKAI TAMIL ARASU KACHCHI 68,௯௫௫ 37.72% 2
SRI LANKA MUSLIM CONGRESS 65,187 35.66% 1
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 31,053 16.99% 1
UNITED NATIONAL PARTY 15,693 8.59% 0
JATHIKA HELA URUMAYA 791
EELAM PEOPLES DEMOCRATIC PARTY 540
Valid Votes 182,794 95.38%
Rejected Votes 8,863 4.62%
Total Polled 191,657 85.44%
Regis. Electors 224,௩0௭
DEVISION RESULTS
Seruwila
General Election 2004
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE19,607 47.22%
UNITED NATIONAL PARTY10,346 24.92%
ILLANKAI TAMIL ARASU KACHCHI6,178 14.88%
SRI LANKA MUSLIM CONGRESS4,
General Election 2004
ILLANKAI TAMIL ARASU KACHCHI 68,௯௫௫ 37.72% 2
SRI LANKA MUSLIM CONGRESS 65,187 35.66% 1
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 31,053 16.99% 1
UNITED NATIONAL PARTY 15,693 8.59% 0
JATHIKA HELA URUMAYA 791
EELAM PEOPLES DEMOCRATIC PARTY 540
Valid Votes 182,794 95.38%
Rejected Votes 8,863 4.62%
Total Polled 191,657 85.44%
Regis. Electors 224,௩0௭
DEVISION RESULTS
Seruwila
General Election 2004
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE19,607 47.22%
UNITED NATIONAL PARTY10,346 24.92%
ILLANKAI TAMIL ARASU KACHCHI6,178 14.88%
SRI LANKA MUSLIM CONGRESS4,
2000 election
-------------
party seruwila trincomalee moothur total
peaples aliance 18517 11928 21393 53860
U N P 14489 12861 17688 46700
T U L F 944 11070 615 14090
E P D P 316 3382 746 4524
Tamil congress 105 3269 192 3746
Telo 36 420 36 498
members peaples aliance 3
U N P 1
---------------------------------------------------------------------------------
2005 ELECTION
--------------
THAMILARASU 6178 43880 17005 68955
muslim cong. 4647 13 378 45523 65187
S L F P 19607 6229 1854 31053
U N P 10346 3193 689 15693
members thamilarasu 2 valid votes 182794 not valid 8642
muslim cong- 1 total 1 41 772 reg.votes 206884
S L F P 1
--------------------------------------------------------------------------
2001 election
--------------
partys total memebers
U N P 62930 2
thamilarasu 56121 1
S L F P 32997 1
J V P 6095 ---
E P D P 1470 ---
-------------
party seruwila trincomalee moothur total
peaples aliance 18517 11928 21393 53860
U N P 14489 12861 17688 46700
T U L F 944 11070 615 14090
E P D P 316 3382 746 4524
Tamil congress 105 3269 192 3746
Telo 36 420 36 498
members peaples aliance 3
U N P 1
---------------------------------------------------------------------------------
2005 ELECTION
--------------
THAMILARASU 6178 43880 17005 68955
muslim cong. 4647 13 378 45523 65187
S L F P 19607 6229 1854 31053
U N P 10346 3193 689 15693
members thamilarasu 2 valid votes 182794 not valid 8642
muslim cong- 1 total 1 41 772 reg.votes 206884
S L F P 1
--------------------------------------------------------------------------
2001 election
--------------
partys total memebers
U N P 62930 2
thamilarasu 56121 1
S L F P 32997 1
J V P 6095 ---
E P D P 1470 ---
திருகோணமலை -அன்றும் இன்றும்
திருகோணமலை மாவட்டத்தின் இன்றைய இக்கட்டான நிலையில் இந்த மாவட்டத்தின் முன்னைய வாக்களிப்பு பட்டிய முழு அலசலை மேற்கொள்வோம்
கடந்தஇரண்டு தேர்தல்களில் இந்த மாவட்டத்தில் மக்களின் வாக்களிப்பு நிலையை முதலில் பார்த்தால் நிறைய விசயங்கள் இலகுவாக புரியும் .முக்கிய கட்சிகள் பெற்ற வாக்கு விபரம் பின்வருமாறு அமைந்தன.
வெள்ளி, 5 மார்ச், 2010
பாராளுமன்றத் தேர்தல் முறை
1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது விகிதாசார பட்டியல் முறையின் அடிப்படையில் நடைபெறுகின்றது. யாப்பின் 95 வது சரத்தின் முதலாம் பிரிவு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு தேர்தல் மாவட்டங்களைப் பிரிக்கும் எனவும், 96 வது சரத்து இலங்கையை 20க்கு குறையாமலும், 24க்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங் களாகப் பிரித்து அம்மாவட்டங்களுக்குரிய பெயரைச் சூட்டுதல் வேண்டும் எனவும் கூறுகின்றது.
1980 களின் ஆரம்பப்பகுதியில் இருந்து இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்கள் 22 தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு யாழ் தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வன்னித்தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது.
98 வது சரத்தின் முதலாம் பிரிவு பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனவும், இவர்களுள் 196 உறுப்பினர்கள் 22 தேர்தல் மாவ ட்டங்களிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்படுவர் எனவும், இவர்களுள் 36 உறுப்பினர்கள் ஒரு மாகாணத்துக்கு நான்கு பேர் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் பிரித்தளிக்கப்படுவர்.
ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள சகல தேர்தல் மாவட்டங்களுக்கும் குறைந்தது ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ளும் வகையில் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
எஞ்சிய 166 உறுப்பினர்களும் மாவட்டங்களில் வாக்காளர்களது விகிதாசாரத்துக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளிக்கப்படும். இதற்காக முழு இலங்கையினது மொத்த வாக்காளர் தொகையை 160 இனால் பிரிப்பதன் ஊடாக தேசிய கோட்டாத் தொகை அல்லது தகைமை பெறு தொகை பெற்றுக்கொள்ளப்படும். அத்தொகையினால் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களினதும் மெத்த வாக்காளர் தொகையை வகுப்பதன் ஊடாக மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடு செய்யப்படும்.
தேசிய கோட்டாத் தொகை = பதிவு செய்யப்பட்ட இலங்கையின் மொத்த வாக்காளர் தொகை
(தகைமை பெறு தொகை) 160
மாவட்டத்துக்குரிய ஆசனம் = மாவட்டத்தின் மொத்த வாக்காளர் தொகை
ேசிய கோட்டாத் தொகை
இவ்வெண்ணிக்கையோடு மாகாணத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 04 ஆசனங்களில் மாவட்டத்துக்குரிய ஆசனத்தையும் சேர்க்கும் போது கிடைக்கப்பெறுகின்ற ஆசனங்களின் எண்ணிக்கையே அம்மாவட்டத்துக்குரிய மொத்த ஆசனத்தொகையாகும். மீதமாக உள்ள 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாக நிரப்பீடு செய்யப்படுவர்.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் யாரும் தனித்துப் போட்டியிட முடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒன்றின் மூலம் அல்லது சுயேட்சைக் குழு ஒன்றின் மூலமே போட்டியிட முடியும். வேட்பு மனுக்களை கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் பெயர்ப் பட்டியல் ஒன்றின் மூலமே தாக்கல் செய்தல் வேண்டும். குறித்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு மூன்றைச் சேர்த்து வரும் எண்ணிக்கையைக் கொண்ட பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
இதை முன்னுரிமைப்பட்டியல் என அழைப்பர். அவ்வேட்புமனு மாவட் டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளரினால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியினால் கையளிக்கப்படுதல் வேண்டும். ஒரு சுயேட்சைக் குழுவின் பட்டியல் ஒரு சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்டு அக்குழுவின் தலைவரால் கையளிக்கப்பட வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் கட்சிகளினதும் சுயேட்சைக்குழுக்களினதும் பட்டியலில் உள்ள பெயர்கள் சிங்கள அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக் களினதும் ஒவ்வொரு வேட்பாளர்க ளுக்குமான இலக்கங்கள் வழங்கப்படும். இம்முறையில் வாக்காளர் ஒருவர் வாக்களிப்பின் போது முதன் முதலில் தான் விரும்பும் கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் சின்னத்திற்கு எதிரே புள்ளடி இடுதல் வேண்டும். அதன் பின்னர் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலிலுள்ள மூன்று வேட்பாளர்களுக்கு தனது மூன்று விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்க வேண்டும்.
வெட்டுப்புள்ளி :- எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலாவது அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் போட்டியில் இருந்து நீக்கப்படும். அதை வெட்டுப்புள்ளி என அழைப்பர்.
இயைவான வாக்கு:- ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் இருந்து வெட்டுப்புள்ளி வாக்குகளை கழித்ததன் பின்வருகின்ற மீதமாகவுள்ள வாக்குத் தொகையே இயைவான வாக்கு என அழைக்கப்படுகின்றது.
போனஸ் ஆசனம்:- தேர்தல் மாவட்டம் ஒன்றில் போட்டியிடும் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களில் எந்தக் கட்சி அல்லது சுயேட்சைக் குழு அம்மாவட்டத்தில் அதிக வாக்கைப் பெறுகின்றதோ அக்கட்சிக்கு அல்லது குழுவிற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் வழங்கப்படும். அதை போனஸ் ஆசனம் என அழைப்பர். இப் போனஸ் ஆசனம் அம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்தே வழங்கப்படும்.
விழைதொகை அல்லது கோட்டாத் தொகை:- தேர்தல் மாவட்டம் ஒன்றில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளிலிருந்து வெட்டுப்புள்ளி வாக்குகள் கழிக்கப்பட்டு பெறப்படுகின்ற இயைவான வாக்குத் தொகையை அம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் தொகையில் போனஸ் ஆசனத்தை கழித்துவரும் தொகையினால் பிரிப்பதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற தொகை விழை தொகை எனப்படும். இதை பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான ஆகக்குறைந்த வாக்குத் தொகை எனவும் கூறலாம். இவ்வாக்குத்தொகையினால் அம்மாவட்டத்தில் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தாம் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குத் தொகையோடு வகுப்பதன் மூலம்கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் உரிய ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒவ்வொரு கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் யார் என்பது அக்கட்சியின் அல்லது குழுவின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதாவது கூடிய விருப்பு வாக்கைக் கொண்டிருப்பவர்கள் வரிசைப்படி தெரிவு செய்யப்படுவர். உறுப்பினர் பதவி வெற்றிடமாகின்ற போது அப்பட்டியலில் விருப்புவாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர் உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்படுவார்.
தேசியப்பட்டியல்:- 1978 ஆம் ஆண்டு யாப்பின் 14 வது திருத்தம் கொண்டுவந்ததன் மூலம் தேசியப் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் 29 பெயர்கள் அடங்கிய தேசியப்பட்டியலை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். அகில இலங்கை ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குத் தொகையினை மொத்தத் தேசியப்பட்டியல் தொகையினால் வகுப்பதன் மூலம் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்குரிய வாக்குத் தொகை பெறப்படும். இவ்வாக்குத் தொகையினால் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் அகில இலங்கை ரீதியாக தாம் பெற்ற மொத்தவாக்குத் தொகையுடன் வகுப்பதன் மூலம் கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்குமுரிய தேசியப் பட்டியல் ஆசன எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாசனங்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையாளர், கட்சிகளின் செயலாளர்களுக்கும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் குறிப்பிட்டு அவ்விடத்துக்கு நியமனம் பெற இருப்பவர்களின் பெயர்களை சிபார்சு செய்யுமாறு கேட்டுக்கொள்வார்.
இவர்களால் சிபார்சு செய்யப்படுகின்றவர்களே தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். தேசியப்பட்டியலில் பெயரில்லாதவர்களுக்கும் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டு முறைகளும் உண்டு.
நன்றி: தினகரன்
புதன், 3 மார்ச், 2010
விழிப்புணர்வு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பாரிய அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக இந்தத் தேர்தல் அமைந்திருந்தது. எதிரிகளின் திட்டமிட்ட சதிக்கு எமது இனத்தின் அரசியல் அபிலாசைகள் அநியாயமாகப் பழியாகிப் போவதையிட்டு தமிழ் ஆர்வலர்கள் புத்திஜீவிகள் கவலை கொண்டார்கள். இது தொடர்பாக இந்த ஆபத்தான நிலை தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. பிரபல ஊடகவியலாளரும் அரசியல் இராணுவ ஆய்வாளருமான மாமனிதர் சிவராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில் கிழக்குப் பல்கலைக்களக விரிவுரையாளர்கள், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் என்பன பங்குபற்றியிருந்தன. அந்த கூட்டத்தில் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலையை மாற்றுவதற்கு அவர்கள் மத்தியில் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும் களத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் .
முதலாவது விடயத்தை அதாவது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமோ அல்லது கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமோ தனித்து நின்று செய்ய முடியாது என்றும் அதற்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவது தீர்மானத்தை கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் தனித்து மேற்கொள்ளுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. விஷப் பரிட்சை தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது அந்த நேரத்தில் மிகவும் சவாலான கஷ்டமான காரியமாக இருந்தது.. அந்த நேரத்தில் அது ஒரு மிகப் பெரிய விஷப் பரீட்சை. அதற்கு மேலாக விடுதலைப்புலிகள் அதற்கு சம்மதிப்பார்களா என்ற சந்தேகமும் பல கல்விமான்களால் எழுப்பப்பட்டிருந்தன. “தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முடியும்” என சிவராம் உறுதியாக சொன்னார். அதற்கு கலாநிதி தம்பையா விரிவுரையாளர் கெனடி ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் போன்றோர் ஆதரவு தெரிவித்தார்கள். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஏனையவர்கள் ஒத்துழைப்புக்களை வழங்குதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து அன்று மாலையே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயற்குழுவின் கூட்டம் மட்டக்களப்பு லேக்வியூ இன் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவர் இரா.துரைரத்தினம் உபதலைவர்களான நடேசன், ஜெயானந்தமூர்த்தி, செயலாளர் சண்.தவராசா, பொருளாளர் அரியநேந்திரன் உட்பட சிலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மட்டக்களப்பு கத்தோலிக்க கழகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க தலைவர் இரா.துரைரத்தினம் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திலேயே தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தைச் சேர்ந்த கலாநிதி தம்பையாவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண். தவராசாவும், தமிழர் மறுமலர்சிக் கழகத்திற்கு இணைப்பாளர்களாக செயற்பட்டார்கள்: மாமனிதர் சிவராம், இரா துரைரத்தினம், நடேசன், ஜெயானந்தமூர்த்தி போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இந்த கழத்தின் முக்கிய வழிகாட்டிகளாகச் செயற்பட்டார்கள். இந்த கழகம் வாழைச்சேனையிலிருந்து கல்லாறு வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் கருத்தரங்குகளை நடத்தியிருந்தார்கள். முக்கிய சவால்: இந்த இடத்தில்தான் இந்தத் தமிழ் ஆர்வலர்கள் முக்கியமான சவாலைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டபோதுதான் மிகப் பெரிய சவால்கலை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் முதற்கட்டமாக தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கூட்டமைப்பு பற்றிப் பேசியபோதுதான் இது ஒன்றும் இலகுவான காரியமாக இருந்துவிடமாட்டது என்று அவர்கள் உணரத் தலைப்பட்டார்கள். தமது கூட்டமைப்பு உருவாக்கும் திட்டம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினரும் த.வி.கூட்டணியின் சிரேஷ்ட தலைவருமான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களிடம் பேசிய பொழுது டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற ஆயுதக்குழுக்களுடன் தாங்கள் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தங்களையும் நிராகரித்து விடுவார்கள் என்றும் முதலில் விடுதலைப்புலிகள் இதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி ஊடகவியலாளர்களின் இந்த முன்மொழிவுக்கு ஒரேயடியாக மறுப்புத் தெரிவித்துவிட்டார். இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தமிழ் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பு வைத்துக்கொண்டு எந்த முகத்துடன் மக்கள் முன்நிலையில் சென்று வாக்குக் கேட்பது என்று தயங்கிய திரு பரராஜசிங்கம் இந்த நகர்வை கைவிட்டுவிடுங்கள் என்று ஊடகவியலாளர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார். அனேகமான மிதவாதக்கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருந்தது. வெறுக்கப்பட்ட அமைப்புகள் ஆம்! அந்த காலகட்டத்தில் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற கட்சிகள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள் புலிகளின் ஆதரவாளர்கள் அனுதாபிகள் மீது மிகவும் மோசமான தாக்குதலை மேற்கொள்வதிலும் அவர்களைச் சித்திரவதை செய்து கொலை செய்வதிலும் இந்த அமைப்புக்கள் மிக ஆர்வம் கொண்டு திரிந்த காலம் அது. தமிழ் மக்களால் குறிப்பாக தமிழ் தேசியவாதிகளால் இந்த அமைப்புக்கள் வெறுப்புடன் பார்க்கப்பட்ட காலம் அது. எனவே தமிழ் கட்சிகளை ஒன்று சேர்த்து ஒரு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை அதிகரிக்கவேண்டிய தேவையை முதலில் விடுதலைப் புலிகளுக்கு உணர்த்தும்படியான நடிவடிக்கையை செய்வது அவசியம் என்று இந்தக் குழு தீர்மானித்தது. இந்த விடயம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த கரிகாலன் அவர்களைச் சந்தித்து தமது இந்தத் திட்டத்தை முன்நகர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் அவரகளுடனான சந்திப்பு மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைத்து அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முகமாக இலங்கைத் தலைமை மேற்கொண்டு வரும் சதி பற்றி சிவராம் விளக்கம் அளித்தார். இந்தச் சதியால் தமிழர் தரப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் இழப்புக்கள் போன்றன பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். ஊடகவியலாளர்களின் கருத்துக்களைக் கவனமாகச் செவிமடுத்த திரு.கரிகாலன் “நல்ல முயற்சி ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆயுதங்களை கைவிட்டு வருவார்களா?” என்று தனது சந்தேகத்தை வெளியிட்டார். அந்த முயற்சியில் தாம் தொடர்ந்து இறங்கப்போவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள். “தமிழ் கட்சிகளின் மனங்களில் எங்கோ ஒரு மூலையில் நிச்சயம் தமிழ் உணர்வு இருக்கத்தான் செய்யும். அதனை வெளிக்கொணர்வதில்தான் எங்களது வெற்றி தங்கியிருக்கின்றது. டெலோவின் கரங்களில் விடுதலைப் புலிகளின் இரத்தக்கறையும், புலிகளின் கைகளில் டெலோவின் இரத்தக்கறையும் பரஸ்பரம் இருக்கின்றன. எமது இனத்திற்காக பழையவைகளை மறப்பதுதான் நல்ல இராஜதந்திரம் என்று விளக்கம் கொடுத்தார். தங்கள் தரப்பிலும் தலைமையுடனும் பேசிவிட்டு முடிவை சொல்வதாக தெரிவித்திருந்தார் கரிகாலன். “இது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சி” என்று கரிகாலன் அவர்களுடன் இருந்த சில புலித் தளபதிகள் ஊடகவியலாளர்களிடம் தமது அபிப்பிராயத்தை தெரிவித்தார்கள். புலிகளின் பதில்: சரியாக ஒரு வாரகாலம் கழித்து கரிகாலனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. கரிகாலன் அவர்களை மீண்டும் சந்தித்த போது அவர் சாதகமான ஒரு பதிலை ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார். இந்த விடயத்தில் விடுதலைப் புலிகளின் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை புலிகளின் தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட தலைவர் திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கும் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஒருவாறு சம்மதித்தார்கள். இந்தக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சிலர் தயக்கம் காட்டிய போதிலும் மாமனிதர் ரவிராஜ் தமிழ் கட்சிகளை இணைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவராக காணப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர் விடுதலைக் கூட்டணியை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரே இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் பின்னடித்தனர். அக்கட்சியின் சார்பில் தீர்மானம் எடுக்க கூடியவராக அந்த நேரத்தில் திருமதி குமார் பொன்னம்பலமே இருந்தார். தமிழ் காங்கிரசுடனான சகல சந்திப்புக்களும் குமார் பொன்னம்பலம் அவர்களுடைய வீட்டிலேயே நடைபெற்றன. அப்படி தமிழ் கட்சிகள் இணைக்கப்பட்டாலும் தங்களுடைய கட்சியிலேயே அனைவரும் போட்டியிட வேண்டும் தமிழ் காங்கிரசின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டிபோட வேண்டும் என்ற நிபந்தனைகள் கூட விதிக்கப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் சேர்வதற்கான தயக்கம் பெருமளவில் வெளிக்காப்பிக்கப்பட்டது. இரத்தக்கறை முன்நாள் ஆயுதக் குழுக்களின கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அவர்கள் இரத்தகறை படிந்த கரங்கள் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் குற்றம் சுமத்தினார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனான ஒரு சந்திப்பின் போது இவ்வாறு சிலர் தெரிவித்த போது சிவராம் கடும் கோபம் கொண்டவராக “நீங்கள் தானே அவர்களை உருவாக்கினீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். “1989ஆம் ஆண்டு ஆயுதங்களோடு இருந்தவர்களுடன் இணைந்து போட்டியிட்டீர்கள். இப்போது அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் நிரோட்டத்திற்கு வந்திருக்கின்ற போது நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்று கடுமையாக வாதிட்டார். 1989ம் ஆண்டு இந்த குழுக்களுடன் சேர்ந்து தாங்கள் போட்டியிட்டபோது தங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தெரிவித்தனர். 1989 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் இந்த கட்சிகள் போட்டியிட்ட போதிலும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முழுக்க முழுக்க ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களே தெரிவு செய்யப்பட்டனர் என்பதையும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் சுட்டிக்காட்டினர். பல சந்திப்புக்கள், நீண்ட இழுபறிகள் போன்றனவற்றின் பின்னர் தமிழ் ஆயுதக் குழுக்களாக செயற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைப்பதற்கு த.வி.கூ மற்றும் தமிழ் காங்கிரஸ் என்ற இரண்டு மிதவாதக் கட்சிகளும் சம்மதித்தன. அடுத்த பயணம்: இதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கிக் கொண்டிருந்த அமைப்புக்களைச் சந்திக்கும்படியான பயணத்தை ஆரம்பித்தார்கள் ஊடகவியலாளர்கள். அந்தப் பயணம் கூட அவ்வளவு இலகுவான பயணமாக இருந்துவிடவில்லை. முதலில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றன. இந்த அமைப்புக்களிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த அமைப்புக்கள் இனிமேல் இலங்கை இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது. அவர்களது இராணுவ பிரிவுகளைக் கலைத்து விட வேண்டும். தமிழ் தேசிய விடுதலையையும் அந்த விடுதலையை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஊடகவியலாளர்களின் இந்த நிபந்தனைகள் தமிழ் ஆயுதக் குழுக்களை பெரிய அளவில் உணர்ச்சிவசப்படுத்தின. அது என்ன ஏக பிரதிநிதித்துவம்? புலிகளும் விடுதலைக்காகப் போராடினார்கள். நாங்களும் விடுதலைக்காகப் போராடினோம். புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஒன்றம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார் டெலோ முதல்வர் ஸ்ரீகாந்தா. மற்றைய அமைப்புக்களின் உடனடி பிரதிபலிப்புக்களும் இப்படியாகத்தான் இருந்தது. ஆனால் இவை அனைத்தையும் கடந்து அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய பலவீனம் இருந்தது. அந்தப் பலவீனத்தின் மீது ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அடிக்க அடிக்க அந்த அமைப்புக்கள் கூட்டமைப்புப் பற்றி யோசிக்கத் தலைப்பட்டன. இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட ஈ.பீ.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் போன்ற அமைப்புகள் 10 வருடங்கள் கடந்துவிட்டிருந்த நிலையிலும் புலிவாலைப் பிடித்த கதையாக அந்தப் பாதையில் இருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது நிலைப்பாடு காரணமாக தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அன்னியப்படும் ஆபத்துக்களையும் அவர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். வடக்கு கிழக்கின் ஒரு சில பிராந்தியங்களைத் தவிர வேறு பிரதேசங்களில் செல்வாக்கு அற்றவர்களாகவே இந்த அமைப்பினர் இருந்தார்கள். தம்மீதுள்ள இரத்தக்கறையை எப்படித் துடைத்துக் கொள்வது தமது அரசியல் எதிர்காலத்தையும் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ளவது என்ற தடுமாற்றம் அவர்கள் மத்தியில் அந்தக் காலகட்டத்தில் இருந்து வந்தது. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் தமிழ் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் போன்றனவற்றை இணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி பற்றி அவர்களுக்கு முன்மொழியப்பட்டது. டெலோவின் நிபந்தனை: சிவராம் தலைமையிலான ஊடகவியலாளர்கள் முதலில் டெலோ அமைப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். டெலோ அமைப்புடனான சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். ,ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் பேசப்பட்டது. கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு கொள்கை அளவில் சம்மதித்த இந்த இரு கட்சிகளும் ஒரு முக்கிய முன் நிபந்தனையை விதித்தார்கள். ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் ஒட்டுக் குழக்களாகச் செயற்பட்ட இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுதலைப் புலிகளால் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டு வந்தார்கள். எனவே விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து தமது உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என்று இந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்ததார்கள். விடுதலைப் புலிகளுடன் பேசி அந்த உத்தரவாதம் விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து பெறப்பட்டது. இந்தச் சந்தர்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க முயற்சியைக் குலைக்கும்படியான ஒரு சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது. டெலோ அமைப்பின் ஒரு முக்கியஸ்தரும் மட்டக்களப்பு ஆரையம்பதிப் பிரதேச சபைத் தலைவருமான ரொபர்ட் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மட்டக்களப்பு நகரில் வைத்தியசாலை வீதியில் வைத்து ரெலோ ரொபர்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணச் சடங்கு இடம்பெற்ற தினம் மாலை ஊடகவியலாளர்களை டெலோ அலுவலகத்தில் ஸ்ரீகாந்தா சந்தித்தார். ரெலோவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்தா விடுதலைப் புலிகள் வழங்கிய உத்தரவாதத்தை மீறிவிட்டார்கள். எங்களை நீங்கள் சந்தித்து கூட்டமைப்பு உருவாக்கம் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது ரொபர்ட் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறாரே. இந்த நிலையில் எப்படி நாங்கள் ஆயதங்களைக் கீழே போடும்படி எமது உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது. யார் எங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள்? என்று விசனம் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியாது ஊடகவியலாளர்கள் மறுநாள் கரிகாலனை சந்தித்தார்கள். ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரிய கரிகாலன் “நீங்கள் எடுக்கின்ற முயற்சி புலிகளின் அரசியல் பிரிவினருக்கு மாத்திரமே தெரியும். இராணுவ மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்னமும் தெரியாது. அதனால்தான் இது நடந்து விட்டது. இனிமேல் இதுபோன்று நடைபெறாது பார்த்துக்கொள்கிறோம்” என்று கரிகாலன் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் கூட்டமைப்பு முயற்சிகளை முற்றாக பாதித்து விடும் என்பதையும் கரிகாலனுக்கு ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள். அதன் பின்னர் முதற்தடவையாக செல்வம் அடைக்கலநாதனையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தனித்தனியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அழைத்து சென்று கரிகாலனுடனான சந்திப்பை ஏற்படுத்தினார்கள். தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி தொடர்பாக தகவல்கள் ஊடகங்களில் வெளிவரக்கூடாது என்றும் ஏற்கனவே உறுதியான தீர்மானம் ஒன்றை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் எடுத்திருந்தது. ஊடகவியலாளர்களே இந்தப் பணியில் நேரடியாக ஈடுபட்டதன் காரணமாக ஊடகங்களில் இந்தச் செய்திகள் கசியவில்லை. நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் ஊடகங்களில் வெளிவராத போதிலும் ஊடகவியலாளர்களையும் மீறி சுரேஷ் பிரேமசந்திரன் கரிகாலனை சந்தித்தது தொடர்பான செய்தி கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றில் வெளிவந்து விட்டது. அந்த செய்தியை பின்னர் டெயிலி மிரர், சண்டே ரைம்ஸ் உட்பட ஆங்கில சிங்கள ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. ஊடகவியலாளர்கள் கொழும்பு ஊடகங்கள் மத்தியில் தங்களுக்கு இருந்த தொடர்புகளைப் பாவித்து இந்த சந்திப்புக்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவராமல் தடுத்திருந்தார்கள். புளொட்டின் நிலைப்பாடு புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றது. ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் ஆயுக்குழுவை கலைத்து விட்டு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் கொண்டிருந்தாலும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் முக்கியமாக வவுனியாவில் உள்ள சிலர் அதற்கு சம்மதிக்காததால் புளொட் அமைப்பை கூட்டமைப்பில் சேர்க்கும் முயற்சி கைவிடப்பட்டது. ஒரு சந்திப்பின் போது சித்தார்த்தன் தங்கள் அலுவலக வாசலில் காவலில் (சென்றி) இருந்த இளைஞனைக் காட்டி கூறினார் “நான் ஆயுதப்பிரிவை கலைத்து விட்டு வந்து அரசியல் செய்யலாம். ஆனால் எம்மை நம்பி வந்த இந்தச் சிறுவர்களை எப்படி பராமரிப்பது? இவர்களது எதிர்காலம் என்ன? என்று கூறி கூட்டமைப்பில் தமது அமைப்பினை இணைத்துக்கொள்ளத் தயங்கினார். மட்டக்களப்பு புளொட் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பாக்கியராசா தமிழ் கட்சிகளுடன் தங்களை இணைக்க வேண்டும் என ஆர்வம் காட்டிவந்தார். ஆனால் அவர்களின் இராணுவப் பிரிவு அதற்கு இடம்கொடுக்கவில்லை. முதலாவது கூட்டம் இதன் பின்னர் 2001ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட முதலாவது கூட்டம் நடைபெற்றது. சிவராம் தலைமையில் ஊடகவியலாளர்கள், சில பேராசிரியர்கள் போன்றோர் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டத்தில்தான் ததே.கூ. பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளில் தலையிடுவதில்லை என்றும் ஊடகவியலாளர்கள் தீர்மானித்துக்கொண்டார்கள். அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த நான்கு கட்சிகளும் இணைந்து வெளித்தலையீடுகள் இன்றி வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசிய நிலைப்பாட்டின் கீழ் போட்டியிட்டு 17 தமிழ் உறுப்பினர்கள் நடாளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்தார்கள்.. 2004 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பல வேட்பாளர்களின் பெயர்களை விடுதலைப்புலிகளே முன்மொழிந்தனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. தேசியக் கடமை: த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் இருந்த பல முக்கியஸ்தர்கள் இன்று உயிருடன் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ஏதோ ஒரு வகையில் பங்காற்றியிருந்த பல தமிழ் ஆர்வலர்களும் தற்பொழுது உயிருடன் இல்லை. த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தின் பிதாமகர் என்று கூறக் கூடிய ஊடகவியலாளர் சிவராம் ஊடகவியலாளர் நடேசன், பேராசிரியர் கலாநிதி தம்பையா போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியார் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரத்தினம்; கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண் தவராஜா; விரிவுரையாளர் கெனடி; விரிவுரையாளர் மோகன்; மருத்துவ கலாநிதி நீதிராசா; ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்; ஊடகவியலாளர் வேதநாயகம் உட்பட பல ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமது தேசியக் கடமைகளை நிறைவேற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை அரசாங்கத்தினாலும் அதனுடைய கூலிப்படைகளினாலும் இவர்கள் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டார்கள்: த.தே.கூட்டமைப்பு ஆக த.தே.கூ. என்பது மிகுந்த பிரயாசைகளினால் பலத்த இழப்புக்களுடன் தமிழ் மக்களின் நன்மைகருதி தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. சிங்களப் பேரினவாதம் அமைத்துக்கொண்டுள்ள ஒரு அரசியல் மேடையில் தமிழ் மக்களின் தேசியம் சர்ந்த குரல்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக தமிழ் ஆர்வலர்களால் வகுக்கப்பட்ட ஒரு அரசியல் வியூகம். தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அவ்வப்பொழுது உலகிற்கு வெளிப்படுத்திக்கொள்ள தமக்குத்தாமே அவர்கள் அமைத்துக்கொண்டுள்ள ஒரு ஜனாநாயகத் தளம்தான் இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இப்படிப்பட்ட இந்தத் த.தே.கூ. இன்று மிக மோசமாகப் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. அதுவும் தமிழ் இனத்தின் காவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினாலேயே இந்த பிளவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த த.தே.கூட்டமைப்பை உருவாக்குவதில் பாடுபட்ட சிவராமின் ஆத்மா இந்த ஒற்றுமையைக் குலைத்த நபர்களை ஒருபோதும் மன்னிக்காது.
முதலாவது விடயத்தை அதாவது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமோ அல்லது கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமோ தனித்து நின்று செய்ய முடியாது என்றும் அதற்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவது தீர்மானத்தை கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் தனித்து மேற்கொள்ளுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. விஷப் பரிட்சை தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது அந்த நேரத்தில் மிகவும் சவாலான கஷ்டமான காரியமாக இருந்தது.. அந்த நேரத்தில் அது ஒரு மிகப் பெரிய விஷப் பரீட்சை. அதற்கு மேலாக விடுதலைப்புலிகள் அதற்கு சம்மதிப்பார்களா என்ற சந்தேகமும் பல கல்விமான்களால் எழுப்பப்பட்டிருந்தன. “தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முடியும்” என சிவராம் உறுதியாக சொன்னார். அதற்கு கலாநிதி தம்பையா விரிவுரையாளர் கெனடி ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் போன்றோர் ஆதரவு தெரிவித்தார்கள். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஏனையவர்கள் ஒத்துழைப்புக்களை வழங்குதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து அன்று மாலையே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயற்குழுவின் கூட்டம் மட்டக்களப்பு லேக்வியூ இன் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவர் இரா.துரைரத்தினம் உபதலைவர்களான நடேசன், ஜெயானந்தமூர்த்தி, செயலாளர் சண்.தவராசா, பொருளாளர் அரியநேந்திரன் உட்பட சிலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மட்டக்களப்பு கத்தோலிக்க கழகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க தலைவர் இரா.துரைரத்தினம் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திலேயே தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தைச் சேர்ந்த கலாநிதி தம்பையாவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண். தவராசாவும், தமிழர் மறுமலர்சிக் கழகத்திற்கு இணைப்பாளர்களாக செயற்பட்டார்கள்: மாமனிதர் சிவராம், இரா துரைரத்தினம், நடேசன், ஜெயானந்தமூர்த்தி போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இந்த கழத்தின் முக்கிய வழிகாட்டிகளாகச் செயற்பட்டார்கள். இந்த கழகம் வாழைச்சேனையிலிருந்து கல்லாறு வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் கருத்தரங்குகளை நடத்தியிருந்தார்கள். முக்கிய சவால்: இந்த இடத்தில்தான் இந்தத் தமிழ் ஆர்வலர்கள் முக்கியமான சவாலைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டபோதுதான் மிகப் பெரிய சவால்கலை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் முதற்கட்டமாக தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கூட்டமைப்பு பற்றிப் பேசியபோதுதான் இது ஒன்றும் இலகுவான காரியமாக இருந்துவிடமாட்டது என்று அவர்கள் உணரத் தலைப்பட்டார்கள். தமது கூட்டமைப்பு உருவாக்கும் திட்டம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினரும் த.வி.கூட்டணியின் சிரேஷ்ட தலைவருமான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களிடம் பேசிய பொழுது டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற ஆயுதக்குழுக்களுடன் தாங்கள் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தங்களையும் நிராகரித்து விடுவார்கள் என்றும் முதலில் விடுதலைப்புலிகள் இதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி ஊடகவியலாளர்களின் இந்த முன்மொழிவுக்கு ஒரேயடியாக மறுப்புத் தெரிவித்துவிட்டார். இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தமிழ் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பு வைத்துக்கொண்டு எந்த முகத்துடன் மக்கள் முன்நிலையில் சென்று வாக்குக் கேட்பது என்று தயங்கிய திரு பரராஜசிங்கம் இந்த நகர்வை கைவிட்டுவிடுங்கள் என்று ஊடகவியலாளர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார். அனேகமான மிதவாதக்கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருந்தது. வெறுக்கப்பட்ட அமைப்புகள் ஆம்! அந்த காலகட்டத்தில் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற கட்சிகள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள் புலிகளின் ஆதரவாளர்கள் அனுதாபிகள் மீது மிகவும் மோசமான தாக்குதலை மேற்கொள்வதிலும் அவர்களைச் சித்திரவதை செய்து கொலை செய்வதிலும் இந்த அமைப்புக்கள் மிக ஆர்வம் கொண்டு திரிந்த காலம் அது. தமிழ் மக்களால் குறிப்பாக தமிழ் தேசியவாதிகளால் இந்த அமைப்புக்கள் வெறுப்புடன் பார்க்கப்பட்ட காலம் அது. எனவே தமிழ் கட்சிகளை ஒன்று சேர்த்து ஒரு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை அதிகரிக்கவேண்டிய தேவையை முதலில் விடுதலைப் புலிகளுக்கு உணர்த்தும்படியான நடிவடிக்கையை செய்வது அவசியம் என்று இந்தக் குழு தீர்மானித்தது. இந்த விடயம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த கரிகாலன் அவர்களைச் சந்தித்து தமது இந்தத் திட்டத்தை முன்நகர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் அவரகளுடனான சந்திப்பு மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைத்து அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முகமாக இலங்கைத் தலைமை மேற்கொண்டு வரும் சதி பற்றி சிவராம் விளக்கம் அளித்தார். இந்தச் சதியால் தமிழர் தரப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் இழப்புக்கள் போன்றன பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். ஊடகவியலாளர்களின் கருத்துக்களைக் கவனமாகச் செவிமடுத்த திரு.கரிகாலன் “நல்ல முயற்சி ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆயுதங்களை கைவிட்டு வருவார்களா?” என்று தனது சந்தேகத்தை வெளியிட்டார். அந்த முயற்சியில் தாம் தொடர்ந்து இறங்கப்போவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள். “தமிழ் கட்சிகளின் மனங்களில் எங்கோ ஒரு மூலையில் நிச்சயம் தமிழ் உணர்வு இருக்கத்தான் செய்யும். அதனை வெளிக்கொணர்வதில்தான் எங்களது வெற்றி தங்கியிருக்கின்றது. டெலோவின் கரங்களில் விடுதலைப் புலிகளின் இரத்தக்கறையும், புலிகளின் கைகளில் டெலோவின் இரத்தக்கறையும் பரஸ்பரம் இருக்கின்றன. எமது இனத்திற்காக பழையவைகளை மறப்பதுதான் நல்ல இராஜதந்திரம் என்று விளக்கம் கொடுத்தார். தங்கள் தரப்பிலும் தலைமையுடனும் பேசிவிட்டு முடிவை சொல்வதாக தெரிவித்திருந்தார் கரிகாலன். “இது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சி” என்று கரிகாலன் அவர்களுடன் இருந்த சில புலித் தளபதிகள் ஊடகவியலாளர்களிடம் தமது அபிப்பிராயத்தை தெரிவித்தார்கள். புலிகளின் பதில்: சரியாக ஒரு வாரகாலம் கழித்து கரிகாலனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. கரிகாலன் அவர்களை மீண்டும் சந்தித்த போது அவர் சாதகமான ஒரு பதிலை ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார். இந்த விடயத்தில் விடுதலைப் புலிகளின் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை புலிகளின் தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட தலைவர் திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கும் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஒருவாறு சம்மதித்தார்கள். இந்தக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சிலர் தயக்கம் காட்டிய போதிலும் மாமனிதர் ரவிராஜ் தமிழ் கட்சிகளை இணைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவராக காணப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர் விடுதலைக் கூட்டணியை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரே இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் பின்னடித்தனர். அக்கட்சியின் சார்பில் தீர்மானம் எடுக்க கூடியவராக அந்த நேரத்தில் திருமதி குமார் பொன்னம்பலமே இருந்தார். தமிழ் காங்கிரசுடனான சகல சந்திப்புக்களும் குமார் பொன்னம்பலம் அவர்களுடைய வீட்டிலேயே நடைபெற்றன. அப்படி தமிழ் கட்சிகள் இணைக்கப்பட்டாலும் தங்களுடைய கட்சியிலேயே அனைவரும் போட்டியிட வேண்டும் தமிழ் காங்கிரசின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டிபோட வேண்டும் என்ற நிபந்தனைகள் கூட விதிக்கப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் சேர்வதற்கான தயக்கம் பெருமளவில் வெளிக்காப்பிக்கப்பட்டது. இரத்தக்கறை முன்நாள் ஆயுதக் குழுக்களின கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அவர்கள் இரத்தகறை படிந்த கரங்கள் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் குற்றம் சுமத்தினார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனான ஒரு சந்திப்பின் போது இவ்வாறு சிலர் தெரிவித்த போது சிவராம் கடும் கோபம் கொண்டவராக “நீங்கள் தானே அவர்களை உருவாக்கினீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். “1989ஆம் ஆண்டு ஆயுதங்களோடு இருந்தவர்களுடன் இணைந்து போட்டியிட்டீர்கள். இப்போது அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் நிரோட்டத்திற்கு வந்திருக்கின்ற போது நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்று கடுமையாக வாதிட்டார். 1989ம் ஆண்டு இந்த குழுக்களுடன் சேர்ந்து தாங்கள் போட்டியிட்டபோது தங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தெரிவித்தனர். 1989 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் இந்த கட்சிகள் போட்டியிட்ட போதிலும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முழுக்க முழுக்க ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களே தெரிவு செய்யப்பட்டனர் என்பதையும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் சுட்டிக்காட்டினர். பல சந்திப்புக்கள், நீண்ட இழுபறிகள் போன்றனவற்றின் பின்னர் தமிழ் ஆயுதக் குழுக்களாக செயற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைப்பதற்கு த.வி.கூ மற்றும் தமிழ் காங்கிரஸ் என்ற இரண்டு மிதவாதக் கட்சிகளும் சம்மதித்தன. அடுத்த பயணம்: இதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கிக் கொண்டிருந்த அமைப்புக்களைச் சந்திக்கும்படியான பயணத்தை ஆரம்பித்தார்கள் ஊடகவியலாளர்கள். அந்தப் பயணம் கூட அவ்வளவு இலகுவான பயணமாக இருந்துவிடவில்லை. முதலில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றன. இந்த அமைப்புக்களிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த அமைப்புக்கள் இனிமேல் இலங்கை இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது. அவர்களது இராணுவ பிரிவுகளைக் கலைத்து விட வேண்டும். தமிழ் தேசிய விடுதலையையும் அந்த விடுதலையை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஊடகவியலாளர்களின் இந்த நிபந்தனைகள் தமிழ் ஆயுதக் குழுக்களை பெரிய அளவில் உணர்ச்சிவசப்படுத்தின. அது என்ன ஏக பிரதிநிதித்துவம்? புலிகளும் விடுதலைக்காகப் போராடினார்கள். நாங்களும் விடுதலைக்காகப் போராடினோம். புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஒன்றம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார் டெலோ முதல்வர் ஸ்ரீகாந்தா. மற்றைய அமைப்புக்களின் உடனடி பிரதிபலிப்புக்களும் இப்படியாகத்தான் இருந்தது. ஆனால் இவை அனைத்தையும் கடந்து அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய பலவீனம் இருந்தது. அந்தப் பலவீனத்தின் மீது ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அடிக்க அடிக்க அந்த அமைப்புக்கள் கூட்டமைப்புப் பற்றி யோசிக்கத் தலைப்பட்டன. இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட ஈ.பீ.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் போன்ற அமைப்புகள் 10 வருடங்கள் கடந்துவிட்டிருந்த நிலையிலும் புலிவாலைப் பிடித்த கதையாக அந்தப் பாதையில் இருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது நிலைப்பாடு காரணமாக தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அன்னியப்படும் ஆபத்துக்களையும் அவர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். வடக்கு கிழக்கின் ஒரு சில பிராந்தியங்களைத் தவிர வேறு பிரதேசங்களில் செல்வாக்கு அற்றவர்களாகவே இந்த அமைப்பினர் இருந்தார்கள். தம்மீதுள்ள இரத்தக்கறையை எப்படித் துடைத்துக் கொள்வது தமது அரசியல் எதிர்காலத்தையும் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ளவது என்ற தடுமாற்றம் அவர்கள் மத்தியில் அந்தக் காலகட்டத்தில் இருந்து வந்தது. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் தமிழ் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் போன்றனவற்றை இணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி பற்றி அவர்களுக்கு முன்மொழியப்பட்டது. டெலோவின் நிபந்தனை: சிவராம் தலைமையிலான ஊடகவியலாளர்கள் முதலில் டெலோ அமைப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். டெலோ அமைப்புடனான சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். ,ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் பேசப்பட்டது. கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு கொள்கை அளவில் சம்மதித்த இந்த இரு கட்சிகளும் ஒரு முக்கிய முன் நிபந்தனையை விதித்தார்கள். ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் ஒட்டுக் குழக்களாகச் செயற்பட்ட இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுதலைப் புலிகளால் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டு வந்தார்கள். எனவே விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து தமது உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என்று இந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்ததார்கள். விடுதலைப் புலிகளுடன் பேசி அந்த உத்தரவாதம் விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து பெறப்பட்டது. இந்தச் சந்தர்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க முயற்சியைக் குலைக்கும்படியான ஒரு சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது. டெலோ அமைப்பின் ஒரு முக்கியஸ்தரும் மட்டக்களப்பு ஆரையம்பதிப் பிரதேச சபைத் தலைவருமான ரொபர்ட் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மட்டக்களப்பு நகரில் வைத்தியசாலை வீதியில் வைத்து ரெலோ ரொபர்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணச் சடங்கு இடம்பெற்ற தினம் மாலை ஊடகவியலாளர்களை டெலோ அலுவலகத்தில் ஸ்ரீகாந்தா சந்தித்தார். ரெலோவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்தா விடுதலைப் புலிகள் வழங்கிய உத்தரவாதத்தை மீறிவிட்டார்கள். எங்களை நீங்கள் சந்தித்து கூட்டமைப்பு உருவாக்கம் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது ரொபர்ட் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறாரே. இந்த நிலையில் எப்படி நாங்கள் ஆயதங்களைக் கீழே போடும்படி எமது உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது. யார் எங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள்? என்று விசனம் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியாது ஊடகவியலாளர்கள் மறுநாள் கரிகாலனை சந்தித்தார்கள். ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரிய கரிகாலன் “நீங்கள் எடுக்கின்ற முயற்சி புலிகளின் அரசியல் பிரிவினருக்கு மாத்திரமே தெரியும். இராணுவ மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்னமும் தெரியாது. அதனால்தான் இது நடந்து விட்டது. இனிமேல் இதுபோன்று நடைபெறாது பார்த்துக்கொள்கிறோம்” என்று கரிகாலன் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் கூட்டமைப்பு முயற்சிகளை முற்றாக பாதித்து விடும் என்பதையும் கரிகாலனுக்கு ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள். அதன் பின்னர் முதற்தடவையாக செல்வம் அடைக்கலநாதனையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தனித்தனியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அழைத்து சென்று கரிகாலனுடனான சந்திப்பை ஏற்படுத்தினார்கள். தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி தொடர்பாக தகவல்கள் ஊடகங்களில் வெளிவரக்கூடாது என்றும் ஏற்கனவே உறுதியான தீர்மானம் ஒன்றை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் எடுத்திருந்தது. ஊடகவியலாளர்களே இந்தப் பணியில் நேரடியாக ஈடுபட்டதன் காரணமாக ஊடகங்களில் இந்தச் செய்திகள் கசியவில்லை. நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் ஊடகங்களில் வெளிவராத போதிலும் ஊடகவியலாளர்களையும் மீறி சுரேஷ் பிரேமசந்திரன் கரிகாலனை சந்தித்தது தொடர்பான செய்தி கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றில் வெளிவந்து விட்டது. அந்த செய்தியை பின்னர் டெயிலி மிரர், சண்டே ரைம்ஸ் உட்பட ஆங்கில சிங்கள ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. ஊடகவியலாளர்கள் கொழும்பு ஊடகங்கள் மத்தியில் தங்களுக்கு இருந்த தொடர்புகளைப் பாவித்து இந்த சந்திப்புக்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவராமல் தடுத்திருந்தார்கள். புளொட்டின் நிலைப்பாடு புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றது. ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் ஆயுக்குழுவை கலைத்து விட்டு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் கொண்டிருந்தாலும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் முக்கியமாக வவுனியாவில் உள்ள சிலர் அதற்கு சம்மதிக்காததால் புளொட் அமைப்பை கூட்டமைப்பில் சேர்க்கும் முயற்சி கைவிடப்பட்டது. ஒரு சந்திப்பின் போது சித்தார்த்தன் தங்கள் அலுவலக வாசலில் காவலில் (சென்றி) இருந்த இளைஞனைக் காட்டி கூறினார் “நான் ஆயுதப்பிரிவை கலைத்து விட்டு வந்து அரசியல் செய்யலாம். ஆனால் எம்மை நம்பி வந்த இந்தச் சிறுவர்களை எப்படி பராமரிப்பது? இவர்களது எதிர்காலம் என்ன? என்று கூறி கூட்டமைப்பில் தமது அமைப்பினை இணைத்துக்கொள்ளத் தயங்கினார். மட்டக்களப்பு புளொட் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பாக்கியராசா தமிழ் கட்சிகளுடன் தங்களை இணைக்க வேண்டும் என ஆர்வம் காட்டிவந்தார். ஆனால் அவர்களின் இராணுவப் பிரிவு அதற்கு இடம்கொடுக்கவில்லை. முதலாவது கூட்டம் இதன் பின்னர் 2001ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட முதலாவது கூட்டம் நடைபெற்றது. சிவராம் தலைமையில் ஊடகவியலாளர்கள், சில பேராசிரியர்கள் போன்றோர் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டத்தில்தான் ததே.கூ. பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளில் தலையிடுவதில்லை என்றும் ஊடகவியலாளர்கள் தீர்மானித்துக்கொண்டார்கள். அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த நான்கு கட்சிகளும் இணைந்து வெளித்தலையீடுகள் இன்றி வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசிய நிலைப்பாட்டின் கீழ் போட்டியிட்டு 17 தமிழ் உறுப்பினர்கள் நடாளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்தார்கள்.. 2004 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பல வேட்பாளர்களின் பெயர்களை விடுதலைப்புலிகளே முன்மொழிந்தனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. தேசியக் கடமை: த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் இருந்த பல முக்கியஸ்தர்கள் இன்று உயிருடன் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ஏதோ ஒரு வகையில் பங்காற்றியிருந்த பல தமிழ் ஆர்வலர்களும் தற்பொழுது உயிருடன் இல்லை. த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தின் பிதாமகர் என்று கூறக் கூடிய ஊடகவியலாளர் சிவராம் ஊடகவியலாளர் நடேசன், பேராசிரியர் கலாநிதி தம்பையா போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியார் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரத்தினம்; கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண் தவராஜா; விரிவுரையாளர் கெனடி; விரிவுரையாளர் மோகன்; மருத்துவ கலாநிதி நீதிராசா; ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்; ஊடகவியலாளர் வேதநாயகம் உட்பட பல ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமது தேசியக் கடமைகளை நிறைவேற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை அரசாங்கத்தினாலும் அதனுடைய கூலிப்படைகளினாலும் இவர்கள் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டார்கள்: த.தே.கூட்டமைப்பு ஆக த.தே.கூ. என்பது மிகுந்த பிரயாசைகளினால் பலத்த இழப்புக்களுடன் தமிழ் மக்களின் நன்மைகருதி தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. சிங்களப் பேரினவாதம் அமைத்துக்கொண்டுள்ள ஒரு அரசியல் மேடையில் தமிழ் மக்களின் தேசியம் சர்ந்த குரல்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக தமிழ் ஆர்வலர்களால் வகுக்கப்பட்ட ஒரு அரசியல் வியூகம். தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அவ்வப்பொழுது உலகிற்கு வெளிப்படுத்திக்கொள்ள தமக்குத்தாமே அவர்கள் அமைத்துக்கொண்டுள்ள ஒரு ஜனாநாயகத் தளம்தான் இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இப்படிப்பட்ட இந்தத் த.தே.கூ. இன்று மிக மோசமாகப் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. அதுவும் தமிழ் இனத்தின் காவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினாலேயே இந்த பிளவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த த.தே.கூட்டமைப்பை உருவாக்குவதில் பாடுபட்ட சிவராமின் ஆத்மா இந்த ஒற்றுமையைக் குலைத்த நபர்களை ஒருபோதும் மன்னிக்காது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
