THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

thamileelam

திங்கள், 26 டிசம்பர், 2011


கல்வி புகட்டிய ஆசானின் கருவைச் சுமக்கும் புங்குடுதீவுப் பாடசாலை மாணவி

புங்குடுதீவு ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியரான சசிக்குமார் தன்னிடம் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் கர்ப்பவதியாக்கியுள்ளார்.

தமிழ்ப் பாட ஆசிரியரின் இந்தக் காம வெறித்தனத்தால் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு 3 மாதக் கரு வயிற்றில் வளர்ந்துள்ளது.


இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுத வேண்டிய மேற்படி மாணவி அதனையும் இழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. அத்துடன் மேற்படி ஆசிரியருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் பாடசாலைக்கு ஆசிரியர்களை நம்பி அனுப்பி வைத்தால் அங்கும் காமக் கொடூரம் அரங்கேற்றப்படுகின்றது.

இந் நிலையில் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக அமைந்திருப்பதுடன், அவர்களின் அறிவும் கல்வியும் மழுங்கடிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்படும்.

வீதியில் சென்றால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாடசாலைக்குச் சென்றால் அங்கும் பிரச்சினைகள் என்றால் எதிர்கால பெண்ணினத்தின் நிலை கேள்விக் குறியாகவே அமைந்து விடும்.

எனவே இவ்வாறு தவறுகள் செய்;பவர்களுக்குச் சட்டம் சரியான பாடம் புகட்டுவதுடன், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துவதும் தற்கால சூழ்நிலையில் முக்கியமானதாக அமைகின்றது.

இவ்வாறு செயற்படுத்தும் பட்சத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் குறைவடைவதற்குக் சந்தர்ப்பங்கள் உண்டு.

புதன், 24 நவம்பர், 2010

வீதி வழிகாட்டி

>>A9 வீதியூடாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்வதாயின் கிட்டத்தட்ட 410 km தூரத்தைக் கடந்து யாழ் நகரை அடைய முடியும். தற்போதைய வீதி அமைப்பின்படி கொழும்பில் இருந்து யாழ் நகரை சென்றடைவதற்கு கிட்டத்தட்ட 9 மணி நேரம் தேவைப்படுகிறது.

>>கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாஞ்சேனை ஊடாக நீர்கொழும்பு வீதியை அடைந்து A3 பாதையூடாக களனிபாலம், வத்தளை, மாபொல, கந்தான, ஜாஎல, சீதுவ, கட்டுநாயக்க, வென்னப்புவ, கட்டுநெரிய, மாரவில, மகாவெவ, சிலாபம், ஆராச்சிகட்டிவ ஆகிய இடங்களைக் கடந்து புத்தளம் நகரை அடைய வேண்டும்.

>>புத்தளம் A10 வீதியூடாக கருவெலகஸ்வெவ, நொச்சியாகம, அனுராதபுரம் ஊடாக யாழ் சந்தியை சென்றடந்து A20 வீதியூடாக சென்று கண்டி வீதியில் மதவாச்சியை சென்றடைய வேண்டும்.

>>பின்னர் A9 வீதியூடாக வவுனியா, புளியங்குளம், மாங்குளம், இரணைமடு, கிளிநொச்சி, ஆனையிறவு, பளை, கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், கைதடி, நாவற்குழி, மாம்பழசந்தி, கச்சேரியடி ஆகிய இடங்களைக் கடந்து யாழ் நகரை சென்றடைய முடியும்.

யாழ்ப்பாண வரைபடம்

yarlmap

இலங்கை நாட்டின் வட மாகாணத்தின் முடிவு எல்லையில் யாழ் மாவட்டம் அமைந்துள்ளது. தலைநகர் கொழும்பில் இருந்து கிட்டத்தட்ட 410 கிலோ மீற்றர் தொலைவில் யாழ்ப்பாணம் உள்ளது. 7 தீவுகள் அடங்கலாக யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 1025 சதுர கிலோ மீற்றர்களாகும். யாழ் மாவட்டம் தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

யாழ் அரச நிர்வாக கட்டமைப்பு
உதவி அரச அதிபர் பிரிவு
பிரதான நகரம்
கிராம
சேவையாளர்கள்
பரப்பளவு (சதுர கிலோமீற்றர்)

நெடுந்தீவு
தீவு வடக்கு
தீவு தெற்கு
யாழ்ப்பாணம்
காரைநகர்
நல்லூர்
தென்மராட்சி
வடமராட்சி கிழக்கு
வடமராட்சி வடக்கு
வடமராட்சி தென்மேற்கு
வலிகாமம் கிழக்கு
வலிகாமம் வடக்கு
வலிகாமம் தெற்கு
வலிகாமம் தென்மேற்கு
வலிகாமம் மேற்கு

நெடுந்தீவு
ஊர்காவற்துறை
வேலணை
யாழ்ப்பாணம்
காரைநகர்
நல்லூர்
சாவகச்சேரி
மருதங்கேணி
பருத்தித்துறை
கரவெட்டி
கோப்பாய்
தெல்லிப்பளை
உடுவில்
சண்டிலிப்பாய்
சங்கானை

6
15
30
28
9
40
60
18
35
35
32
45
30
28
25

49.5
43.8
98.4
21.7
21.7
27.4
229.4
118.5
54.2
65.9
102.2
61.1
32.3
50.2
49.30


யாழ் குடாநாடு வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் இந்தியப் பெருங்கடலை எல்லையாகக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தெற்கு எல்லைகளாக யாழ்ப்பாண கடனீரேரியும் கிளிநொச்சி மாவட்டமும் அமைந்துள்ளன. தரைவழியாக ஆனையிறவு கடநீரேரியை கடந்து யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். இவ்ஆனையிறவு கடநீரேரி இலங்கையின் மிக முக்கியமான உப்பளங்களில் ஒன்றாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசம் பிரபலம் அடைய வேண்டும் என்றால் அங்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் யாழ்பாணத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பலாலி விமானநிலையமும் காங்கேசந்துறை துறைமுகமும் அங்குள்ளன. இவற்றின் மூலம் யாழ் மாவட்டத்திற்கான தொடர்புகள் மேலும் இலகுபடுத்தப்படுகின்றன. ஒரு காலங்களில் யாழ்ப்பாணத்தின் இளவட்டங்கள் காலையில் படகு மூலம் தென் இந்தியாவிற்கு சென்று அங்கு வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை பார்த்துவிட்டு மாலையில் திரும்புவது வழமையாகும். இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள வயதில் பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் அவர்களின் இளவயது நினைவுகள் எமக்குத் தெரியவரும்.

யாழ் மாவட்டம் ஒரு உலர் வலயப் பிரதேசமாகும். இங்கு பனை மற்றும் தென்னை ஆகிய பயிர்கள் திடல்களாக பரந்து விரிந்துள்ளன. பழங்காலங்களில் பெண்களுக்கு சீதனம் வழங்கும்போது பனந்திடல்களை வழங்கினார்கள். அதனால் முழுக்குடும்பமுமே பசி, பட்டினி இன்றி வாழ்ந்ததுடன் பனந்திடல்களை வழங்குவதை அவர்கள் கௌரவமாக நினைத்தார்கள்.

ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வட கிழக்கு பருவப்பெயர்ச்சி மூலம் இங்கு மழை வீழ்ச்சி கிடைக்கிறது. இப்பகுதி மக்கள் இப்பருவப்பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு நெல்லை பெரும்போகமாக பயிரிட்டு அறுவடை செய்து வருடம் முழுவதும் வளத்தோடு வாழ்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இம்மாவட்டத்திற்கு 1811.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியைப் கிடைக்கப்பெற்றுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகளவான வெப்பநிலை இங்கு காணப்படும். இம்மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு 21.40 தொடக்கம் 32.40 சென்ரிகிரேட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இங்குள்ளவர்கள் சிறுபோககாலங்களில் பயறு, உழுந்து, சணல், கௌபி, தினை, குரக்கன், சாமை போன்ற சிறு தானியங்களை பயிரிட்டு தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இங்கு பயிரிடப்படும் புகையிலை, முந்திரி, வெங்காயம், மிளகாய், மாம்பழம், பலாப்பழம், வெற்றிலை, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் மாத்திரமல்ல தென்னிலங்கையிலும் நல்ல கிராக்கி காணப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு பிரதான தொழில்களாக விவசாயமும் மீன் பிடியும் காணப்படுகிறது. விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ் மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தமது உள்ளூர் சந்தைத் தேவையையும் நிறைவு செய்வது மட்டுமல்லாமல் தென்னிலங்கைக்கும் மீன்கள் மற்றும் கருவாடுகளை அனுப்பும் திறமை அவர்களிடம் உண்டு.

இவ்வாறு தன்னிறைவு பெற்ற மாவட்டமாகத் திகழும் யாழ்ப்பாணம் பற்றிய பல்சுவை விபரங்களைத் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

சனி, 30 அக்டோபர், 2010

பிரதான செய்திகள்
நுரைச்சோலையில் சீனர்கள் கைகலப்பு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
[ 2010-10-30 13:27:29 ] []
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயங்களுடன் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையில் எங்களையும் சேர்த்துக் கொள்வோம்!
[ 2010-10-30 02:02:34 ]
சிங்கள தேசம் தமிழர் இனப்படுகொலையை மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கின்றது. கைகளை பின்புறமாகக் கட்டியும், காலால் உதைத்தும், கதறக்கதற பாலியல் வல்லுறவையும், உயிருடனே கூரிய ஆயுதங்களால் வெட்டியும், தடைசெய்யப்பட்ட நச்சு ஆயுதங்களால் எம்மவர்கள் கொல்லப்பட்டதும், தொலைக்காட்சியிலும் இணையங்களிலும் நாம் கண்ட காட்சிகளாகும். [மேலும்]
பிந்திய செய்திகள்
நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: ஐ.தே.க
[ 2010-10-30 15:10:12 ]
இலங்கையில் நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. [மேலும்]
வடக்கு காணி உறுதிகளை புலிகள் அழித்துள்ளனர்: திவயின தகவல்
[ 2010-10-30 15:03:42 ]
வடக்கு காணி உறுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களின் காணி அலுவலகங்களில் காணப்பட்ட தரவுகளை புலிகள் அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
செய்திகள்
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 12:56.59 PM ]
அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நேற்றைய தினம் இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இரகசிய சுற்றுநிருபம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்திலிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
மட்டக்களப்பில், நஞ்சருந்தி வயோதிபர் பலி! சடலம் பொலிஸாரினால் மீட்பு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 11:35.39 AM ]
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையோரத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். [மேலும்]
அனைத்து பல்கலைக்கழக மாணவர் குழுவினர் மனோ கணேசனுடன் சந்திப்பு: தமிழ் மாணவர்கள் துன்புறும்பொழுது தென்னிலங்கை அமைப்புகள் குரல் எழுப்பவில்லை என சுட்டிக்காட்டு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 11:15.24 AM ] []
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினர். [மேலும்]
காணாமற்போய் ஒரு வருடம் கடந்த அனைவருக்கும் இறப்பு அத்தாட்சி பத்திரம்: பொது நிர்வாக அமைச்சு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 11:00.42 AM ]
காணாமற்போய் ஒரு வருடத்துக்கு மேலாக உயிர் வாழ்வதான எந்தத் தகவலும் இல்லாதவர்கள் அனைவரும் மரணமடைந்ததாகக் கருதி இறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவிக்கின்றது. [மேலும்]
இலங்கை அனைத்து இன மக்களினதும் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்.
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:53.58 AM ]
இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களினதும் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு முன்னேற்ற இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவிக்கின்றார். [மேலும்]
அமைச்சர் மைத்திரிபாலவுக்கு அடிபணியத் தயாராகின்றார் ஜனாதிபதி.?
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:37.05 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்குகளில் அதிருப்தியுற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து எதிர்ப்பியக்கமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் மைத்திரிபால முயன்று வருவது குறித்த தகவல் வெளியானவுடன் ஜனாதிபதிக்கு வயிற்றைக் கலக்கியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. [மேலும்]
விஜயகலா மகேஷ்வரன் அரசாங்கத்துடன் இணையப் போகின்றார்
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:33.32 AM ]
ஐ.தே.க.வின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஷ்வரன் மிக விரைவில் அரசாங்கத் தரப்புடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன. [மேலும்]
முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் சிங்களத் திரைப்படமொன்றின் கதாநாயகன் ஆகின்றார்
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:12.22 AM ]
முன்னாள் புலி உறுப்பினராகவிருந்து, புனர்வாழ்வு பெற்ற சாந்தலிங்கம் கோகுல் ராஜா என்ற இளைஞர் சிங்களத் திரைப்படமொன்றின் கதாநாயகனாக நடிக்கும் வரம் பெற்றுள்ளார். [மேலும்]
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த 13 பேர் கைது
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 08:35.43 AM ]
புத்தளத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று இடங்களில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
கொழும்பில் இருந்து வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்திச் சென்றவர் சென்னையில் கைது
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 08:11.17 AM ]
கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் 20 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை வயிற்றில் விழுங்கிய நிலையில் கடத்திச் சென்ற இந்திய இளைஞர் ஒருவரை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். [மேலும்]
தற்காலிக முகாம்களில் உள்ள மக்கள் நிலையான முகாம்களுக்கு நகருமாறு இராணுவம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 05:01.35 AM ]
தற்போது தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியேறி வேறு முகாம்களுக்கு நகர்ந்து செல்லுமாறு இடம்பெயர் மக்களிடம் இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
நாங்கள் சிறுபான்மை இனமில்லை! ஒரு தேசிய இனம்!! நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேச்சு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 05:01.05 AM ]
சிறுபான்மை மக்கள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை என்று ஜனாதிபதி ராஜபக்ச அடிக்கடி கூறிவருகின்றார். உண்மையில் அது உளப்பூர்வமாக சொல்லப்பட்டதென்றால் மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அதைச் சொன்னவர்களே பின்னர் சிறுபான்மைத் தமிழர்கள் என்று உச்சரித்தார்கள். [மேலும்]
ஹிட்லரின் ஆட்சியையே இலங்கை அரசு இன்று கடைப்பிடிக்கின்றது: மங்கள
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 04:37.40 AM ]
சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தையும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். [மேலும்]
இறுதி மாணவன் கைது செய்யப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்: பல்கலை.ஒன்றியம்
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 04:15.01 AM ]
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரைக் கைதுசெய்திருப்பதன் மூலம் ஒன்றியத்தின் செயற்பாடுகளை நிறுத்திவிடலாமென்றோ அல்லது மாணவர்களை அச்சுறுத்தி விடலாமென்றோ அரசாங்கம் நினைத்துவிடக் கூடாது. இறுதி மாணவனும் கைதுசெய்யப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று ஒன்றியத்தின் பதில் தலைவர் ராஜீவ பண்டார தெரிவித்துள்ளார். [மேலும்]
வன்னி மக்கள் இராணுவத்தினரின் சேவைகளையே விரும்புகின்றனர் என்கிறார் ஆணைக்குழு தலைவர்
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 03:56.10 AM ]
வவுனியா மற்றும் வன்னி மக்கள் அங்கு இராணுவத்தினர் மேற்கொள்ளும் சேவையை விரும்புகின்றனர். சிவில் நிர்வாகத்தை அந்தளவு விரும்பவில்லை என்று கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் சட்டமா அதிபருமான சி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். [மேலும்]

திங்கள், 18 அக்டோபர், 2010

blog-post_07.html
http://eelavarkural.blogspot.com/2010/10/blog-post_07.html

வியாழன், 23 செப்டம்பர், 2010