THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 27 மே, 2010

கஸ்பர் ராஜுக்கு பதிலடி

அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள்- தமிழ் தேசிய போலிகளின் கூடாரம்

Posted Image


மக்கள் தன்னர்வ எழுச்சி ஏற்படும் போதொல்லாம் அவர்களை கட்டுபடுத்துவதற்கு அவர்கள் வழியிலே சென்று லகானை பிடித்து தன்னார்வ போராட்டங்களை மழுங்கடிக்க செய்வார்கள்.. உலகின் பெரும் பால ஏகாதிபத்திங்கள் பொதுவாக கடைபிடிக்கும் வழி முறை.. அந்த வகையில் பொந்திய அரசு ஈழ பிரச்சனையை அடக்க தேர்வு செய்தது.. அரசு சாரா தொண்டு நிறுவனங்களை.. மக்களிடம் இவ்வாறன வர்கள் களம் இறங்கும் போது ..மக்கள் மனநிலை இவர்களோ பொது தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு மற்ற அரசியல் வாதிகளை போல இந்த விடயத்தில் என்ன லாபம் வந்துவிடபோகிறது..பொது நலத்தோடு தான் செய்கிறார்கள் என்ற எண்ணமே மேலோங்கும்.. சூடான் இனபடுகொலைகள், ஈராக்,ஆப்கானிஸ்தான்,போஸ்னியோ போன்ற இடங்களில் எல்லாம் இவ்வாறன பொது தொண்டு நிறுவனங்களின் சேவை(?) ஏகாதிபத்தியங்களுக்கு தேவை பட்டே வந்துள்ளன..

உண்மையில் யார் இந்த பகத் பாஸ்பர்?

நாம் என்ற அரசு சார பொது தொண்டு நிறுவனத்தின் தலைவர்(?) அல்லது ரோ உளவாளி..
இவ்வாறன பாதிரி இயக்கம் ஆரம்பிக்கலாமா ? அதற்கு அவர்கள் திருச்சபை அனுமதி அளிக்குமா என்பதெல்லாம் வேறு கதை..

உண்மையில் தமிழர் நாட்டில் எப்போது தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற ஆரம்பிக்கிறார்.. இதற்கு முன்னால் சில சிலுப்பு பொய்களை அவிழ்த்துவிட்டு கொண்டிருந்தார்..சூசை கடைசிநாள் அன்று பேசினாராம் ..பொந்தியா வெள்ளை கொடியோடு வரசொன்னதாம்.. வந்தார்களாம் சுட்டு கொன்றுவிட்டார்களாம்.. நீலி கண்ணீர் வடித்து ஊரை ஏமாற்றுகிறார்..

. இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த பகத் பாஸ்பர் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள் தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் பகத் பாஸ்பர் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று பகத் பாஸ்பர் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?


இது போகட்டும் இவர்களுடைய அமைப்பின் கொள்கை என்ன என்று கேட்டுபாருங்களேன் பொந்திய அரசின் வெளியுறவு கொள்கையை மாற்ற போகிறார்களாம்!.. லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இருந்தே இவர்களின் வெளியுறவு கொள்கையின் அம்சம் தெரிய ஆரம்பித்துவிட்டது(மலையக தமிழர்களை நாடற்றோர் ஆக்கியது)..காண்க காணோளி


()
இறுதிக் கட்டம்! அறியாத தகவல்கள்
அருட் தந்தை கஸ்பர் ராஜ்
Courtesy: நக்கீரன் - வைகாசி 26, 2010




2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அரசியற் பேச்சுவார்த்தைகள் நடத்தி கூட்டாட்சி அடிப் படையிலான ஓர் தீர்வினை அடைவது ஆகிய மூன்று நோக்குகளுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன் றிற்கு அமெரிக்கா கொள்கை ரீதியான முடிவெடுத்து, செயற் திட்டம் நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில்தான் சிவசங்கர் மேனன் அவசரமாக அமெரிக்கா சென்றார்.

இங்கு நக்கீரனில் எழுதப்படுபவை தமிழுலகம் இது வரை அறியாத தகவல்கள்.

மார்ச் 05-ம் தேதியன்று வாஷிங்டன் டி.சி.யில் வைத்து பூர்வாங்கமாக சிவசங்கர் மேனனிடம் அமெரிக்கா தனது திட்டத்தைத் தெரிவித்ததாக, சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்ன ரேயே அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியா வுக்கு தெரிந்தே இருந்தன. தென் ஆசியாவில் முதன்முறையாக மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தில் மைய மாக இருந்தது. PACOM என்று ஆங்கிலத்தில் பொதுவாக அறியப்படும் அமெரிக்காவின் "ஆசிய பசிபிக், ராணுவப் பிரிவாகும். 2009 பெப்ருவரி மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஆசிய பசிபிக் ராணுவப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் கொழும்பு நகரில் கோத்தபய்யா உள்ளிட்ட முக்கிய ராணுவத் தளபதியர்களை சந்தித்து இது தொடர்பாக விரிவாக விவாதித்திருந்தமையால் அமெரிக்கத் திட்டத்தினது பரிமாணங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தெரிந்தே இருந்தது.

வெளிப்படையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள ராஜபக்சே சகோ தரர்கள் தயங்கியபோதும் அமெரிக்காவின் ராணுவத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்கா இலங்கைக்குள் ராணுவரீதியாய் நேரடியாகக் காலூன்றிவிட்டார்கள் என்றால் அவர்களது நீண்டகால கட்டுப்பாட்டிலிருந்து மீள முடியாதென்பதும், தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தாவிட்டாலும் 2003 நார்வே நாட்டு இடைப்பாட்டிலான ஓஸ்லோ (Oglo) பிரகடனத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அமைப்பொன்றினை அமெரிக்க-மேற்குலக நாடுகள் தமிழருக்காக வலியுறுத்துவார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அமெரிக்காவின் இத்திட்டம் செயல்வடிவ நிலைக்கு நகருமுன் அதிரடி யாக -பெரும் மனித அழிவு நேர்ந்தாலும்கூட -யுத்தத்தை முடுக்கி முடித்து விட ராஜபக்சே சகோதரர்கள் விரும்பியதில் வியப்பில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நிறைவுற்ற அந்த இன அழித்தல் கடைசிப் போருக்குத் தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.

அமெரிக்காவின் வல்லாதிக்க அபிலாஷைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதுபற்றி இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அது உண்மையும்தான். இப்பூவுலகின் கோடானுகோடி மக்களது வாழ்வு வறுமையுற்று நலிந்திட அமெரிக்காவின் வல்லாதிக்க பொருளியல் -ராணுவ கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்காய் வக்காலத்து வாங்குவது நம் வேலையல்ல. அதேவேளை சீனாவின் வல்லா திக்க, மேலாதிக்கக் கனவுகள் (Imperial Dreams) அமெரிக்காவை விட பன் மடங்கு வக்கிரத்தன்மையும் இன வெறித் தன்மையும் கொண்டவை. அதுபற்றி தமிழில் அதிகம் விவாதிக்கப் படவில்லை. காரணம் தமிழ் சிறு பத்திரிகை வட்டத்தில் இயங்குகிற பெரும்பான்மையோரின் இடதுசாரிச் சார்பு நிலை.

உண்மையில் அமெரிக்கா, போரின் இறுதிக் கட்டத்தில் நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதென்ற நிலைப்பாடு நோக்கி நகர்ந் தமைக்கு காரணமும்கூட தமிழ் மக்கள் மீதான அன்பு, பாசம் அல்ல. சீனா -தனது எதிர்கால வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு (Imperial Expansion) இந்தியப் பெருங்கடல் மேலாண்மை மிக முக்கியமானதென்ற கருதுகோளுடன் இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறதென அமெரிக்கா கருதியதும் அதனைத் தடுத்து நிறுத்தவும் -தொடர்ந்தும் எதிர்காலத்தில் சீனாவை சற்று கிடுக்கிப்பிடி நிலையில் வைத்திருக்க வும் இலங்கையில் நேரடி ராணுவ நிலைகொள்ளல் உதவுமென கருதி யதும்தான் முக்கிய காரணங்கள்.

2009 மார்ச் 6-ந் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்: ""இலங்கை போர்க்களத்தில் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவும், அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமென்ற வாய்ப்புகளை அடையாளப்படுத்தவும் எங்களது அதிகாரிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். துன்பப்படும் அந்த மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் செய்வோம்.

மிகவும் நுட்பமான ராஜதந்திர சொல்லாடல்களால் போர்த்தப்பட்ட ரிச்சர்ட் பவுச்சர் அவர்களின் இந்தக் கூற்றினை அமெரிக்கா தன் திட்டத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இலங்கை -சீனா -இந்தியா உள்ளிட்ட நாடுகள் பார்த்தன.

முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வந்து ராஜபக்சே சகோதரர்களுடன் தமது ராணுவத் திட்டம் குறித்து விவாதித்த அதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடும் -அவர்களின் அனைத்துலக பிரதிநிதி களூடாய் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் முதலில் அறிவிக்க வேண்டும் -அதனைத் தொடர்ந்து அமெரிக்க இடைப்பாட்டில் இலங்கை அரசும் போரினை நிறுத்தும். அமெரிக்கப் படையினர், மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டுடன் பாது காப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்துவர். புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட் டின் கீழ் பூட்டி வைக்கப்படும் (Locking of Weapons). தொடர்ந்து அமெரிக்க ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே முறிந்துபோன அரசியற் பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பூட்டி வைத்த ஆயுதங்களை அமெரிக்கா விடுதலைப்புலிகளிடமே திருப்பித் தந்துவிடும். இவையே விடுதலைப்புலிகளுடன் விவாதிக்கப்பட்டவை.

மேற்சொன்னவற்றில் ஆயுதங்களை பூட்டி வைக்க ஒப்படைப்பதில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலை மைக்கு உடன்பாடு இருக்க வில்லையெனவும், அதே வேளை அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்காக அமெரிக்கா ஆயத்தப் பணிகள் செய்யத் தொடங்கியிருந்தது. அதன்படி PACOM-அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் கடற்பிரிவினது Marine Expeditionary Brigade முல்லைத்தீவு கடற்பரப்பில் தரையிறங்கும். PACOM-ன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் இந்நடவடிக்கையில் இணைந்திருக்கும்.

மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தென் ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் ராணுவ அரசியல் வரலாற்றின் தீர்க்கமானதொரு திருப்பு முனையாக அமையவிருந்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா (Coalition Humanitarian Task Force)- "நேச நாடுகளின் மனிதாபிமான செயற் படை' எனப் பெயரிட்டிருந்த போதும் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் அனைத்தும் இந் நடவடிக்கையை (Invasion) "படையெடுப்பு' என்றே குறித் திருந்ததாய் சொல்லப்படுகிறது.

NATO (North Atlantic Treaty Organization) அமெரிக்கா தலை மையிலான ராணுவக் கூட்டமைப்பு நாடுகளோடும் இத்திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வழமையாக அமெரிக்காவின் உலக ராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கும் பிரான்சு நாடு முல்லைத்தீவு நோக் கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு தீவிர ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அடிநிலைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவசர மாக கொழும்பு வந்தார். ""போரினை முறைப்படியாகவும், மனித நேயத்தோடும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியே அவசர பயணம் வந்தி ருக்கிறேன்'' என தனது பயண நோக்கு பற்றி குறிப்பிட்டார் ஜான் ஹோல்ம்ஸ். அமெரிக்காவினது ராணுவத் திட்டத் தினது ஓர் அங்கமாகவே இவரது பயணம் இருந்ததென பின்னர் கூறப்பட்டது.

இதற்கிடையில் தென்ஆசியாவில் அமெரிக்காவின் புதிய இந்த ராணுவ ஈடுபாடு தொடர்பாக அதிபர் ஒபாமா நிர்வாகத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பொறுப்பு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடையதாயிருந்திருக்கிறது. அவரே கூட ராணுவ நடவடிக்கை தொடர்பான பூரண விசுவாசம் கொண் டிருக்கவில்லையென்றே சொல்லப்படு கிறது. ராணுவ நடவடிக்கையின் களநிலை அவசியத்தை மேலும் உறுதி செய்ய வேண்டி ""உண்மை நிலை'' அறிக்கை யொன்றினை வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பணிக்கப்பட்டதாகவும், அதன் படி கொழும்பு, அமெரிக்க தூதரகத்தின் தலைமை துணை பொறுப்பாளர் ஜேம்ஸ் மூர் யாழ்குடாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதிகள், மதத் தலைவர்கள், மக்கள் என பலரையும் சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றினை அனுப்பியதாகவும், ஜேம்ஸ் மூர் அவர்களின் இந்த அறிக்கை தான் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஊசலாடும் மனநிலையிலிருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களை ராணுவ நடவடிக்கை அவசியம் என்ற உறுதி நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா செயலில் இறங்குமுன் சீனாவின் தீர்க்கமான சமிக்ஞையோடு முழு மூர்க்கமான கடைசி யுத்தத்தை ராஜபக்சே சகோதரர்கள் தொடங்கினர். அமெரிக்கா ராணுவ நட வடிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இந்தியாவும் சண்டை நிறுத்த முயற்சியொன்றினை அவசரத் தன்மையோடு முன்னெடுத்தது.

அம்முயற்சியில் சிறியதோர் தபால் காரனாக நானும் இருந்தேன். அந்த முயற்சி தோற்றது ஏன்? அமெரிக்காவின் ராணுவ திட்டத்தை இந்தியா ஆதரித்ததா?
Posted Image


வெள்ளி, 21 மே, 2010

வெள்ளி, 21 மே, 2010

bern-solothurn election result-------------------------------------------------- p.suganya --v.suntharalingam--s.suresh--k.thileepanBern--------------------- 297------------257----------259-------397-------Biel---------------------- 120-------------77----------133-------125-------Munsingen------------ 82------------115-----------62-------110-------Thun-------------------- 115-------------88-----------62-------120-------köniz-------------------- 199------------210-----------46-------114-------Ostermundingen---- 157------------100----------147-------143-------Burgdof----------------- 149------------247-----------78--------47---------bützberg---------------- 177------------184-----------59--------65---------Olten-------------------- 106-------------74-----------28--------27---------Solothurn--------------- 170------------220--------- 41-------122-------- Grenchen--------------- 143------------101-----------41--------90--------Langnau------------- 185------------195-----------31--------23-------______________________________________________________________________________Total------------------------1880-----------1846----------973------1367-------______________________________________________________________________________Total Voted 6070Not Valid 4 (Thun--2, Solothurn-1, Langanau-1)
இடுகையிட்டது pungudutivu நேரம் 3:39 pm 0 கருத்துரைகள்

வாக்குச்சாவடிகள் சுகன்யா சுந்தரலிங்கம்

புதன், 19 மே, 2010

மனிதன் manithan.com

வெளிச்சத்திற்கு வரும் அம்பலங்கள். பாலச்சந்திரனிடம் ஒரு கேள்வி. கிரிமினல் வேலை செய்பவர் எப்படி மக்கள் பிரதிநிதியாக முடியும்.
பரிஸ் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் இந்த பாலச்சந்திரன் பெற்ற வாக்குகள் 168மட்டுமே. ஆனால் அவரும் இப்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்து திரிகிறார். 168 வாக்குகள் பெற்றவர் மக்கள் பிரதிநிதியா என நீங்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படலாம் . ஆனால் அதுதான் உண்மை. பாலச்சந்திரன் போன்ற தலைக்குள் எதுவும் இல்லாததுகள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டதை அறிந்த பிரான்ஸ் தமிழ் மக்கள் இவர்களுக்கா நாங்கள் வாக்கு போடுவது என வாக்களிக்க செல்லாது வீடுகளில் மௌனமாக இருந்து விட்டார்கள். மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் முன்னணி சட்டவாளரான உருத்திரகுமார் அவர்களின் வழிகாட்டலில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரிய சாபக்கேடாக அமைந்தது போல படிப்பறிவில்லாத பல மோசடிகளை செய்யும் பாலச்சந்திரன் 168 வாக்குகளில் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். என்ன பாலச்சந்திரன் மோசடிக்காரரா என அவரை தெரியாதவர்கள் கேட்கலாம். அவரின் ஊரைச்சேர்ந்த எங்களைப்போன்றவர்களுக்கு அவர் என்ன படித்தார் என்ன தில்லுமுல்லுச்செய்தார் என்ற விடயங்கள் விலாவாரியாக தெரியும். அதில் ஒரு சில விடயங்களை மட்டும் இங்கே நான் தருகிறேன். அவர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் வீண்பழி சுமத்தி எழுதியதற்கும் பேசியதற்கும் பகிரங்கமாக மன்னிப்புக்கோரும் வரை அவரின் வண்டவாளங்கள் தொடர்ச்சியாக வானொலிகள் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் வெளிவரும் என்பதை கூறிக்கொண்டு அவர் பற்றிய சில விடயங்களை மட்டும் இங்கே தருகிறேன். தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லிக்கொண்டு திரியும் பாலச்சந்திரன் என்ன படித்தார் எப்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தார் என்ற ஒரு சில விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஊடகவியலாளர் என்றால் அதற்கான ஒரு தகமை இருக்கிறது. ஆகக்குறைந்தது கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையிலாவது சித்தியடைந்திருக்க வேண்டும். ஒரு தினசரி பத்திரிகையிலாவது ஆசிரிய பீடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். ஊடககற்கை நெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும் . இது எதுவுமே இல்லாத பாலச்சந்திரன் தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லுவதை கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலையில் ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். என்ன கொடுமை இது. நான் இதை சொன்ன போது அவரைத்தெரிந்த அனலைதீவைச்சேர்ந்த ஒரு நண்பர் எனக்கு சொன்னார். அண்ண ஊடககற்கை நெறியைத்தான் விடுங்கோ. ஒழுங்கா உவங்கள் பள்ளிக்கூடத்தில கூட படிக்கயில்லை என சொன்னார். உண்மைதான் .நாரந்தனை அரசமரச்சந்தியில சோத்துக்கடை வைச்சிருந்த இவரின் தகப்பன் இவரை படிக்கிறதுக்கு பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப அவற்றை தலைக்க படிப்பு ஏறாமால் கடைசில இவர் நாரந்தனையில தேத்தண்ணிக்கடை வைச்சிருந்தார். எனக்கு இப்பவும் உந்த பாலச்சந்திரன் தோளில துவாயும் போட்டுக்கொண்டு தேயில பெட்டியில காலையில பாண் கொண்டு போற காட்சிதான் மனதுக்க இருக்கு. இவர்கள் அந்த நேரத்தில (1975-1977 காலப்பகுதி) ஐக்கிய தேசியக்கட்சிக்காக வேலைசெய்தவர்கள். இவர் சுவிசுக்கு வந்த பிறகு சிவா என்ற இவரின் பெறாமகன் மொறோக்கோவுக்கு போய் தூள் கடத்தி வர அதை பரிசில வித்துத்தான் இவர்கள் இங்கை முதலாளி ஆகினவர்கள். அதன் பின்னர் கள்ளக்கிறடிற் செய்துதான் பணம் சம்பாதிச்சவர் எண்டதும் பலருக்கும் தெரிந்த விடயம்தான். கள்ளக்கிறடிட் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். பாலச்சந்திரன் செய்யும் கள்ளக்கிறடிட் பற்றி சொல்லத்தான் வேணும். கடன் எடுப்பதற்காக மோசடியான முறையில் போலியான பத்திரங்களை எல்லாம் தயாரிப்பது இவர்தான். பிரான்ஸ் சட்டத்தில் மிகவும் கிரிமினல் வேலை என சொல்லப்படும் இந்த போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெறுவதும் கடன் பெற்றவர்கள் கடனை கட்டாமல் தலைமறைவான சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. போலி ஆவணங்களைத்தயாரித்து பெறும் கடன்களில் பெரும்பகுதி பாலச்சந்திரனுக்கே செல்லும். அது மட்டுமல்ல களவாடப்படும் கார்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கும் மோசடி நடவடிக்கைகளிலும் பாலச்சந்திரன் ஈடுபட்டிருக்கிறார். அப்படிப்பட்ட பாலச்சந்திரன் இன்று தன்னை மக்கள் பிரதிநிதி என்றும் ஊடகவியலாளர் என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார். ஒரு கிரிமினல் மோசடிக்காரன் எப்படி மக்கள் பிரதிநிதி என்றும் ஊடகவியலாளர் என்றும் சொல்ல முடியும். அவரைப்பற்றி பல விடயங்கள் இருக்கின்றன. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய நினைத்த பாலச்சந்திரனுக்கு அழிவு காலம் வந்து விட்டது. இந்த கிரிமினல் எப்படி சிறிலங்கா புலனாய்வு பிரிவு பிரான்ஸ் புலனாய்வுப்பிரிவுகளின் உளவாளியாக இருந்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தான் என்பது தொடக்கம் இவரின் அந்தரங்க விடயங்கள் வரை பல விடயங்களை அடுத்தடுத்த பகுதியில் நீங்கள் பார்க்கலாம். மீண்டும் சந்திப்போம்.கே.தேவராசன்

கிரிமினல் ஈழநாடு பாலச்சந்திரன்

மனிதன் manithan.com

வெளிச்சத்திற்கு வரும் அம்பலங்கள். பாலச்சந்திரனிடம் ஒரு கேள்வி. கிரிமினல் வேலை செய்பவர் எப்படி மக்கள் பிரதிநிதியாக முடியும்.
பரிஸ் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் இந்த பாலச்சந்திரன் பெற்ற வாக்குகள் 168மட்டுமே. ஆனால் அவரும் இப்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்து திரிகிறார். 168 வாக்குகள் பெற்றவர் மக்கள் பிரதிநிதியா என நீங்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படலாம் . ஆனால் அதுதான் உண்மை. பாலச்சந்திரன் போன்ற தலைக்குள் எதுவும் இல்லாததுகள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டதை அறிந்த பிரான்ஸ் தமிழ் மக்கள் இவர்களுக்கா நாங்கள் வாக்கு போடுவது என வாக்களிக்க செல்லாது வீடுகளில் மௌனமாக இருந்து விட்டார்கள். மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் முன்னணி சட்டவாளரான உருத்திரகுமார் அவர்களின் வழிகாட்டலில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரிய சாபக்கேடாக அமைந்தது போல படிப்பறிவில்லாத பல மோசடிகளை செய்யும் பாலச்சந்திரன் 168 வாக்குகளில் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். என்ன பாலச்சந்திரன் மோசடிக்காரரா என அவரை தெரியாதவர்கள் கேட்கலாம். அவரின் ஊரைச்சேர்ந்த எங்களைப்போன்றவர்களுக்கு அவர் என்ன படித்தார் என்ன தில்லுமுல்லுச்செய்தார் என்ற விடயங்கள் விலாவாரியாக தெரியும். அதில் ஒரு சில விடயங்களை மட்டும் இங்கே நான் தருகிறேன். அவர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் வீண்பழி சுமத்தி எழுதியதற்கும் பேசியதற்கும் பகிரங்கமாக மன்னிப்புக்கோரும் வரை அவரின் வண்டவாளங்கள் தொடர்ச்சியாக வானொலிகள் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் வெளிவரும் என்பதை கூறிக்கொண்டு அவர் பற்றிய சில விடயங்களை மட்டும் இங்கே தருகிறேன். தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லிக்கொண்டு திரியும் பாலச்சந்திரன் என்ன படித்தார் எப்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தார் என்ற ஒரு சில விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஊடகவியலாளர் என்றால் அதற்கான ஒரு தகமை இருக்கிறது. ஆகக்குறைந்தது கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையிலாவது சித்தியடைந்திருக்க வேண்டும். ஒரு தினசரி பத்திரிகையிலாவது ஆசிரிய பீடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். ஊடககற்கை நெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும் . இது எதுவுமே இல்லாத பாலச்சந்திரன் தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லுவதை கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலையில் ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். என்ன கொடுமை இது. நான் இதை சொன்ன போது அவரைத்தெரிந்த அனலைதீவைச்சேர்ந்த ஒரு நண்பர் எனக்கு சொன்னார். அண்ண ஊடககற்கை நெறியைத்தான் விடுங்கோ. ஒழுங்கா உவங்கள் பள்ளிக்கூடத்தில கூட படிக்கயில்லை என சொன்னார். உண்மைதான் .நாரந்தனை அரசமரச்சந்தியில சோத்துக்கடை வைச்சிருந்த இவரின் தகப்பன் இவரை படிக்கிறதுக்கு பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப அவற்றை தலைக்க படிப்பு ஏறாமால் கடைசில இவர் நாரந்தனையில தேத்தண்ணிக்கடை வைச்சிருந்தார். எனக்கு இப்பவும் உந்த பாலச்சந்திரன் தோளில துவாயும் போட்டுக்கொண்டு தேயில பெட்டியில காலையில பாண் கொண்டு போற காட்சிதான் மனதுக்க இருக்கு. இவர்கள் அந்த நேரத்தில (1975-1977 காலப்பகுதி) ஐக்கிய தேசியக்கட்சிக்காக வேலைசெய்தவர்கள். இவர் சுவிசுக்கு வந்த பிறகு சிவா என்ற இவரின் பெறாமகன் மொறோக்கோவுக்கு போய் தூள் கடத்தி வர அதை பரிசில வித்துத்தான் இவர்கள் இங்கை முதலாளி ஆகினவர்கள். அதன் பின்னர் கள்ளக்கிறடிற் செய்துதான் பணம் சம்பாதிச்சவர் எண்டதும் பலருக்கும் தெரிந்த விடயம்தான். கள்ளக்கிறடிட் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். பாலச்சந்திரன் செய்யும் கள்ளக்கிறடிட் பற்றி சொல்லத்தான் வேணும். கடன் எடுப்பதற்காக மோசடியான முறையில் போலியான பத்திரங்களை எல்லாம் தயாரிப்பது இவர்தான். பிரான்ஸ் சட்டத்தில் மிகவும் கிரிமினல் வேலை என சொல்லப்படும் இந்த போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெறுவதும் கடன் பெற்றவர்கள் கடனை கட்டாமல் தலைமறைவான சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. போலி ஆவணங்களைத்தயாரித்து பெறும் கடன்களில் பெரும்பகுதி பாலச்சந்திரனுக்கே செல்லும். அது மட்டுமல்ல களவாடப்படும் கார்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கும் மோசடி நடவடிக்கைகளிலும் பாலச்சந்திரன் ஈடுபட்டிருக்கிறார். அப்படிப்பட்ட பாலச்சந்திரன் இன்று தன்னை மக்கள் பிரதிநிதி என்றும் ஊடகவியலாளர் என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார். ஒரு கிரிமினல் மோசடிக்காரன் எப்படி மக்கள் பிரதிநிதி என்றும் ஊடகவியலாளர் என்றும் சொல்ல முடியும். அவரைப்பற்றி பல விடயங்கள் இருக்கின்றன. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய நினைத்த பாலச்சந்திரனுக்கு அழிவு காலம் வந்து விட்டது. இந்த கிரிமினல் எப்படி சிறிலங்கா புலனாய்வு பிரிவு பிரான்ஸ் புலனாய்வுப்பிரிவுகளின் உளவாளியாக இருந்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தான் என்பது தொடக்கம் இவரின் அந்தரங்க விடயங்கள் வரை பல விடயங்களை அடுத்தடுத்த பகுதியில் நீங்கள் பார்க்கலாம். மீண்டும் சந்திப்போம்.கே.தேவராசன்

சனி, 15 மே, 2010

யாழ்

ஞாயிறு, 9 மே, 2010

வணக்கம்
ஒவ்வொரு நாளும் கணினியின் உபயோகம் பரவலாகிக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக இணையம் திகழ்கிறது. தொடக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே கோலோச்சிவந்த இந்த ஊடகத்தில் இன்று அழகுத் தமிழில் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள், சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் இணையத்தின் வாயிலாக நம் திரைக்கு வந்து நம் வாசிப்புக்குத் தீனி போடுகின்றன. அதிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன.
அடுத்து, ‘வாசிப்பதெல்லாம் சரி, இது ஒரு வழிப்பாதையாக இருக்கிறதே, வாசிப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்குமா?’ என்றும் தேடுகிறோம். அந்த வாய்ப்பை தான் வலைப்பதிவுகள் தருகின்றன.
‘என் கவிதையையோ கதையையோ பதிப்பிக்க ஏற்றதா என்பதை எப்படி ஒரு துணை ஆசிரியரோ, உதவியாளரோ தீர்மானிக்க முடியும்? வேண்டும் ஜனநாயகம்! படிப்பவர்கள் சொல்லட்டும், அது படிக்கத் தகுதியானதுதானா என்று’ என்பதுபோல நமக்குள் எண்ணங்கள் எழும்புவதும் இயற்கை. காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு என்னும்போது, நம் எழுத்து நமக்கு காவியம்தான், சத்தியவாக்குதான்.
இதன் இன்னொரு பக்கமும் இருக்கிறது. எழுதுபவர் எண்ணிக்கை அதிகமாகும்போது, யார் இந்தப் படைப்புகளை சேகரிப்பது, தரம் பிரிப்பது, மின் வடிவத்தில் இணையத்தில் ஏற்றுவது, இதற்கெல்லாம் பொறுப்பேற்பது? ஐந்து கட்டுரைகளுடனும் வரும் ஒரு இதழில் ஐம்பது கட்டுரைகள் பதிப்பிக்கமுடியுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான், தன் படைப்புகளை தானே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் ப்லாக்கிங் (Blogging) என்றழைக்கப்படும் வலைப்பதித்தல் இன்று தமிழிலும் எளிதில் செய்ய முடிகிறது. உலகம் முழுவதிலும் இன்றைக்கு சுமார் 40 லட்சம் ப்லாக்ஸ் ( இனி நாம் வலைப்பதிவுகள் என்று அழைப்போம்) இருக்கலாம் என்று ஒரு செய்தி சொல்கிறது. இப்போதைக்கு தமிழில் சுமார் 7000 வலைப்பதிவுகள் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழில் தம் எண்ணங்களை, படைப்புகளைப் பதிக்க ஆர்வமுள்ள ஒருவர், எந்தப் பெரிய கணினித் தொழில்நுட்ப அறிவும் தேவைப்படாமல், எந்த செலவும் செய்யாமல் இதைச் செய்ய முடியும். ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்.
உங்கள் எழுத்துக்களை மின்குதிரை மேலேற்றி உலகம் முழுமைக்கும் கொண்டுசெல்லத் தயாராகிவிட்டீர்களா? வாருங்கள், மிக அடிப்படையான கணினி அறிவு, இணையத்தொடர்பு வசதி இவை இரண்டும் மட்டும் உங்களிடம் இருக்குமானால், எப்படி உங்கள் எழுத்துக்களை, எண்ணங்களை பொன்னெழுத்துக்களால் பதிக்க முடியாவிட்டாலும், மின்னெழுத்துக்களால் பதிக்கலாம் என்பதை இங்கு எளிய விளக்கங்களுடன் தெரிந்துகொள்ளலாம்.
இன்னேரம் உங்களுக்குள் சில கேள்விகள் தோன்றியிருக்கவேண்டுமே. இதோ உங்கள் மனதில் கிளம்ப வாய்ப்பிருக்கக்கூடிய கேள்விகளில் சில:
சிலர் சொந்தமாக வலைப்பக்கம் (homepage) வைத்திருக்கிறார்களே, அதற்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?
ஓரளவுக்கு கணினி அறிவு வேண்டும் என்றால், எந்த அளவுக்கு?
தமிழில் தாளில் எழுதத் தெரியும். தட்டச்சு செய்யத்தெரியாது, அப்படியே தெரிந்தாலும் தமிழ் கீபோர்ட், சாப்ட்வேர் எல்லாம் வேண்டுமே எங்கே போவது?
சரி, நான் தேவையான சாப்ட்வேரெல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். என் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் தமிழ் எழுத்து சரியாய்த் தெரியுமா? இப்போதே ஒரு சில பத்திரிகைகள் படிக்க முடிவதில்லை. நிறைய பான்ட் தொல்லைகள். இதுக்கு என்ன செய்வது?
என்னென்னவெல்லாம் எழுதலாம்? இலக்கியமெல்லாம் எனக்கு வராதே…
எனக்கு நான் சொல்ல நினைப்பதை எங்கேயாவது கொட்டிவிடவேண்டும் என்று ஆசை, ஆனால் என் பெயர் வெளியே தெரியக்கூடாது, அதுக்கு இதில் வழி இருக்கா?
சரி, நான் பாட்டுக்கு எழுதித்தள்ளுகிறேன், அதை யாராவது படிக்கிறாங்களான்னு எப்படித்தெரிஞ்சுக்கிறது?
படிக்கிறவர்கள், தான் என்ன நினைக்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லமுடியுமா?
இதற்கு என்ன செலவாகும்?
என் எழுத்துக்களை யாரும் காப்பியடித்துவிட்டால்?
இப்படிப் பதிப்பிப்பதால் எனக்கு எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு?
இப்படி எழுதுவதால் எனக்கு ஏதும் தொல்லைகள் வருமோ?
இதற்கெல்லாம் விடை தெரிந்துகொள்ளும் முன் தமிழில் உள்ள வலைப்பதிவுகள் சிலவற்றை நீங்கள் பாருங்கள். இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. எனவே இவற்றை எவ்விதத்திலும் உங்கள் கற்பனைக்கோ ஆர்வத்துக்கோ எல்லையாகக் கொள்ளவேண்டியதில்லை. ஒரு புரிதலுக்காக மட்டுமே.
இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பதிவுகளைப் பார்க்கலாம்:
http://djthamilan.blogspot.comhttp://tamilnathy.blogspot.comhttp://jyovramsundar.blogspot.comhttp://naayakan.blogspot.com
அரசியல், சமூகம் குறித்த கருத்துகளுக்கு சில மாதிரிகள்
http://www.vinavu.com/http://tamilsasi.com/
பல்சுவை பதிவுகளுக்கு:
http://asifmeeran.blogspot.comhttp://truetamilans.blogspot.com
திரைப்படம், திரைப்பட விமர்சனம் குறித்த பதிவுகளுக்கு
http://pitchaipathiram.blogspot.comhttp://jackiesekar.blogspot.comhttp://cablesankar.blogspot.comhttp://www.hollywoodbala.com
பங்குச்சந்தை, அறிவியல், தொழில்நுட்பம், கணினி மென்பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு:
http://fuelcellintamil.blogspot.comhttp://panguvaniham.wordpress.comhttp://tamilgnu.blogspot.com
மருத்துவம் குறித்த தகவல்களுக்கு
மருத்துவர் புருனோவின் http://www.payanangal.in/
இவ்வாறு சுமார் 7000 வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. என்ன உடனே ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறதா ?
இப்பொழுது மேலே நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடைகளை தேடலாம்.
வலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்
வலைப்பதிவுகள் - சில கேள்விகள்
ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்
வலைப்பதிவு சேவைகளும் எழுதுபொருட்களும்
முதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்