THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 29 ஜனவரி, 2010

இறுதிகட்டம்- நடந்தது என்ன?

புதன்கிழமை, 13 ஜனவரி 2010 04:15 |
தங்களிடம் சரணடைய வந்த நடேசனையும் புலித்தேவனையும் சிங்கள இராணுவத்தினர் மண்டியிட வைத்து சுட்டுக் கொன்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய யுத்தத்தின் இறுதி நாட்களில் முக்கிய தலைவர்களான நடேசனும் புலித்தேவன் போன்றவர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த செய்தியை சிறிலங்கா அரசு அப்போது மறுத்திருந்தது. ஆனால் சிறிலங்கா இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இதுபற்றிய தகவலை வெளியிட்டார். பின்னர் அவரே அதனை மறுத்தார்.

தற்போது அந்த கொடூர சம்பவம் குறித்து சிறிலங்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டி.பி.எஸ்.யேசப் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இறுதிப்போரின் போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நிலப்பகுதியை முற்றாக சுற்றிவழைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்ததுடன் விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்திருந்தது.

அதன்படி விடுதலைப்பலிகளின் ஒரு அணி இராணுவத்திற்கு எதிரான கடைசிநேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றினை மேற்கொண்டு முற்றுகைக்குள் இருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல் துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது எனவும் இத்திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி சரணடைதல் தெர்டர்பான விடயத்தை விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புகளுடனும் அவர் தொடர்பு கொண்டு பேசினார்.

ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள் கொழும்பில் இருந்த மூன்று மேற்குலக நாடுகளின் தூதுவர்கள். ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயர் அதிகாரிகள் பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுடன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடாத்தினார்.

மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் விடுதலைப்புலிகளின் சார்பாக சரணடையும் விடயம் தொடர்பாக பேசியுள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களாக இங்கிலாந்து ஊடகவியலாளர் கெல்வின் ல்வின் ஐநா செயலாளர் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரை காலை 5.00 மணிக்கு எழுப்பி விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதாக அறிவித்துள்ளார்கள் என்றும் ஐநா அதிகாரி என்ற வகையில் விஜய் நம்பியார் அங்கு சென்று அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த விஜய் நம்பியார் இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் தான் பேசியதாகவும் சரணடைபவர்களின்
பாதுகாப்பிற்கு அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை நடேசனுடன் தொடர்பில் இருந்த இன்நொருவரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்பியான அரியநேந்திரன் சந்திரகாந்தன் சிறிலங்கா அரச தலைவருடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி சரணடையும் நடைமுறைகள் தொடர்பாக அரசுக்கு புலிகள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் போது அங்கு தான் செல்லவிரும்புவதாகவும் சந்திரகாந்தன் எம்பி மகிந்த ராசபக்சவிடம் கூறினார். அதற்கு பதிலளித்த ராசபக்சே “போர் நடைபெறும் பகுதிக்கு பாதுகாப்பு அல்ல அங்கு செல்ல வேண்டாம். பெருந்தன்மையும் ஒழுக்கமும் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் தலைவர்களின் பாதுகாப்பிற்கு நிச்சயம் உத்தரவாதம் அளிப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.

மே-18ம் திகதி காலை 6.30மணியளவில் தொடர்பு கொண்ட சந்திரகாந்தன் எம்பி சரணடையும் விடுதலைப்பலிகளின் பாதுகாப்பிற்கு சிறிலங்கா அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அதனால் சரணடையும்படி தான் நாளை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பின்னர் மேற்குலக நாடொன்றில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் பேசிய நடேசன் தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவதே மேல் என்றும் கூறியிருந்தார்.

புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு

இதன் பின்னர் சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிரகாரம் நடேசன் புலித்தேவன் ஆகியோர் தலைமையில் பத்து முதல் பதினைந்து வரையிலானோர் முன்னே வெள்ளைக் கொடியை ஏந்திச் செல்வது என்றும் அவர்களிற்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்திற்கு பின்னால் தளபதி ரமேஸ் மற்றும் இளங்கோ தலைமையில் முப்பது முதல் நாற்பது வரையிலானோர் வெள்ளைக் கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தின் மனித நேயம் அறவே இல்லாத 59வது டிவிசன் படையணியைவிட 58வது டிவிசன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58வது டிவிசன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால் சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீமாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59வது டிவிசன் படையணியின் தளபதி பிரசன்ன டீ சில்வா தனது படையணியின் நான்பெமர குழுவினரை நகர்த்தினார். 59வது டிவிசன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்படன் கோசல விஜயகோன் தலைமையிலும் டெல்ரா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியே பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்ரா பிரிவுக்கு மேஜர் விபுல திலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப் பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடடுமும் வழங்கப்பட்டது.

அப்போது நடேசன் புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர்(பத்து பதினைந்து பேர்) கைகளில் வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஸ் இளங்கோ தலைமையில் (நாற்பது நாற்பத்தைந்து பேர்) சரணடைவதற்கு வந்து கொண்டிருந்தனர்.

நடேசன் தலைமையிலானோர் படுகொலை.

நடேசனது தொகுதிலiனரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்துச் சென்ற அதே வேளை ரமேஸ் தலைமையிலானவர்களை சுமார் நூறு மீட்டர் தொலைவில் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச் செல்லப்பட்ட நடேசன் குழுவினர் கரையில் முழங்காலில் நிற்குமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர் அவர்களை சுடுவதற்று தயாராகினர். சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது.

உடனே வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுட வேண்டாம் என்று அழுது குளறியபடி எழுந்து சென்று கணவனுக்கு அருகில் செல்லஇ கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்த போது அங்கு நின்று கொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல்3நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில் காவலரண் பகுதிக்குள் கூட்டிச் செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக் கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஸ் குழுவினர் உடணடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத் தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும் படி கத்தியபடி கலைத்துச் சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

ஓடும் போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓடமுடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்து விட்டனர். இதனை அடுத்து கலைத்துச் சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலையே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்று தள்ளினர். அந்த கூட்டத்தில் இருந்து ஒருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

மிகப்பெரும் கொடூரம்

இந்தப் படுகொலைப் படலம் போர் முடிவுற்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால் சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது தன்னைக் கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராசபக்சே விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவில் இருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது உயர் மட்டத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம் பெற்றதா என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகின்றது.

மறைக்க முடியாது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்தப் படுகொலைவிடயத்தை அரசு இலகுவில் மறைத்துவிட முடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்கக் கூடிய அளவிற்கு சிறிய சம்பவம் அல்ல.

கொடூரமான மனிதப் பேரழிவைப் பற்றி எழப்போகின்ற கரிsa னைகளையும் அதனையொட்டி எழுப்பப் படப்போகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தல் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்கா பாதுகாத்துவரும் “சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர் நெருக்கடியான நிலை ஒன்றிற்குள் தள்ளப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக