THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

தேர்தலை ஒட்டிய இந்த பேரூந்து சேவைகளின் ஆலவட்டம்

ஏ9 வீதியூடாக கட்டுப்பாடற்ற பஸ் சேவைகள்
ஏ9 வீதி 24 மணித்தியாலமும் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான இரவு நேர இ.போ.ச பஸ் சேவை இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடபிராந்திய இ.போ.ச பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்து ஏ9 வீதியூடாக இராணுவ வழித்துணையின்றி சாதாரண பஸ் சேவைகள் நேற்று முதல் ஆரம்பாகியுள்ளன. இதுநாள் வரையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா, மன்னார், கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை நோக்கிப் புறப்பட்ட பஸ் வண்டிகள் ஏ9 வீதியில் இராணுவ வழித்துணையுடன், வாகனத் தொடரணியாகவே நடைபெற்று வந்தன. இதேபோன்று வவுனியாவில, மன்னார், கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட்ட பஸ் வண்டிகளுக்கு ஏ9 வீதியில் இராணுவ வழித்துணையுடன் கூடிய வாகனத்தொடரணியுடனேயே நடைபெற்று வந்தன. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் வண்டிகள் வவுனியா தேக்கவத்தையில் இருந்து இராணுவத்தினரின் அனுமதி பெற்ற பின்பே பயணிகள் பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர் இந்த நடைமுறையும் இப்போது மாற்றப்பட்டுள்ளது. வியாழன் முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பஸ் வண்டிகள் இ.போ.ச நேர அட்டவணைக்கமைய சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனையடுத்து, இந்த பஸ் நிலையங்களில் இருந்து அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடைவ பஸ்களில் பயணிகள் ஏறியதும் புறப்படத் தொடங்கியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக